Wednesday, June 25, 2014

நான் "பீர்" குழந்தை: மப்பில் தள்ளாடும் 2 வயது சிறுவன் (வீடியோ இணைப்பு)

சீனாவில் மதுவிற்கு அடிமையாகியுள்ள 2 வயது சிறுவன் தினமும் பீர் குடிப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சீனாவின் ஷாங்காய் நகரில் வசித்து வரும் செங் செங் என்ற 2 வயது சிறுவன், தினமும் பால் குடிப்பதற்கு பதிலாக 2 பாட்டில் அளவிற்கு பீர் அருந்தி வருகிறான்.
இதுகுறித்து அவனின் பெற்றோர் கூறுகையில், எங்களது மகன் பத்து மாத குழந்தையாக இருக்கும்போது அவனுடைய தந்தை குடித்துவிட்டு மீதம் வைத்திருந்த பீரை குடித்ததனால், அன்று முதல் தினமும் பால் குடிக்காமல் பீர் பாட்டிலை கேட்டு அடம்பிடிக்கின்றான் என வருத்ததுடன் கூறியுள்ளார்.
இதனால் சிறுவனின் உடல்நலம் ஏதும் பாதிக்கபடவில்லை என்றாலும் அவனது கண்கள் எப்போதும் போதை நிறைந்ததாகவே காணப்படுகிறது.
எனவே மருத்துவர்களின் கண்காணிப்பில் சிறுவனை வைத்த பெற்றோர், பீரை அவன் மறப்பதற்கான வழிமுறைகள் குறித்து அலோசனை பெற்று வருகின்றனர்.
இதேபோல் கடந்த சில நாட்களுக்கு முன் சீனாவில் இரண்டு வயது குழந்தை ஒன்று சிகரெட் பிடித்த காணொளி ஒன்று யூடியூப் இணையதளத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment