Saturday, May 31, 2014

தேசியக் கொடியை ஆபாசமாக அணிந்த மல்லிகா ஷெராவத்: கைது செய்ய கோரிக்கை!

நடிகை மல்லிகா ஷெராவத் தேசியக் கொடியை அவமதித்துவிட்டதால் அவரை கைது செய்ய வேண்டும் என்று கோரிக்கை வலுத்துள்ளது.
மல்லிகா ஷெராவத் நடித்த டர்ட்டி பாலிடிக்ஸ் என்றபடத்தின் போஸ்டர் வெளியிடபட்டு உள்ளது.
அதில் அவர் மூவர்ண கொடியில் உள்ள நிறத்தில் உள்ள ஆடையை ஆபாசமாக அணிந்து போஸ் கொடுத்துள்ளார்.
கே.சி.பொகாடியா இயக்கத்தில் தயாராகி உள்ளபடம் டர்ட்டி இந்த படத்தின் கதை பன்வாரிதேவி என்ற செக்ஸ் தொழிலாளியின் நிஜவாழ்க்கையை மையமாக வைத்து எடுக்கப்பட்டு உள்ளது.
பன்வாரி தேவி என்ற பாலியல் தொழிலாளி கடந்த சில வருடங்களுக்கு முன்னர் ராஜஸ்தான் அரசியல்வாதிகளிடம் தொடர்பு கொண்டு அவர்களுடன் ஆபாசமாக இருப்பது போன்ற காணொளிகள் எடுத்து மிரட்டி வந்தார்.
இந்த கதையை அடிப்படையாக வைத்து தயாரிக்கபட்டுள்ள திரைப்படம்தான் டர்ட்டி பாலிடிக்ஸ். இந்த படத்தின் போஸ்டரில் அரசியல்வாதியின் கார் ஒன்றில் படுகவர்ச்சியாக உட்கார்ந்திருக்கும் மல்லிகா ஷெராவத் ,கையில் சிடி கேசட் ஒன்றை வைத்துள்ளார்.
பின்புறத்தில் ராஜஸ்தான் மாநில சட்டமன்றம் உள்ளது. தேசியகொடியின் நிறத்தில் ஆடையை ஆபாசமாக உடுத்தி உள்ளார்.
இதனைத் தொடர்ந்து பாரதீய ஜனதா கட்சியின் மற்றும் ஆர்.எஸ்.எஸ் அமைப்பை சேர்ந்தவர்கள் மல்லிகாவை உடனடியாக கைது செய்ய வேண்டும் என போராட்டம் நடத்தி வருகின்றனர்.

No comments:

Post a Comment