Thursday, May 29, 2014

அதிரடி தடை விதித்த நரேந்திர மோடி: அதிர்ச்சியில் மத்திய அமைச்சர்கள்

நரேந்திர மோடி, மத்திய அமைச்சர்கள் தங்களது உறவினர்களை தனிப்பட்ட அதிகாரிகளாக நியமிக்க கூடாது என தடை விதித்துள்ளார்.
பிரதமர் மோடி, தனது மந்திரிசபை சகாக்களுக்கு தான் கையெழுத்திட்டு ஒரு அறிக்கை அனுப்பியுள்ளார்.
அதில், எந்தவொரு அமைச்சரும், உறவினர்களை, தமது தனிப்பட்ட அதிகாரிகளாக நியமிக்க தடை விதித்துள்ளார். மந்திரிகள் தங்களது தனிப்பட்ட அதிகாரிகள் நியமனத்தில் பின்பற்ற வேண்டிய விதிமுறைகளை சுட்டிக்காட்டியுள்ளார்.
அமைச்சர்கள் தங்கள் செலவினங்களை குறைக்க வேண்டும், மக்களுடன் நேரடி தொடர்பினை வைத்துக்கொள்ள வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
மேலும், அமைச்சர்கள தங்களது தனிப்பட்ட அதிகாரிகளை நியமனம் செய்வதில், பிரதமர் தலையிட்டு உத்தரவு பிறப்பித்திருப்பது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment