Friday, May 23, 2014

மட்டு மாவட்டத்தில் உயிர்ச் சிற்பங்களில் அசத்தம் கலைஞர் ( படங்கள் இணைப்பு)

இந்திய கலைஞர்களைப் போன்று சிற்பக்கலையில் முன்னேற வேண்டுமென்று ஆவலுடன் செயற்பட்டு
 வரும் இவர் வளப்பற்றாக்குறை காரணமாக தமது முயற்சியை முன்னெடுக்கமுடியாத நிலை காணப்படு
வதாக தெரிவிக்கின்றார்.

மட்டக்களப்பு, களுதாவளையைச் சேர்ந்த வளர்ந்துவரும் சிற்பக்கலைஞர் கிருபைரட்ணம் தனது
புதல்வருடன் இணைந்து சிற்பக்கலையில் ஈடுபட்டு பல்வேறு வித்தியாசமான சிற்பங்களை உருவாக்கி
 வருகிறார்.

அத்துடன் இவரது சிற்பக்கலை பற்றி கிழக்கு மாகாணத்தில் பேசப்பட்டாலும் இந்திய சிற்பக்கலைக்கு
 நிகராக தமது சிற்பத்தை உலகளாவிய ரீதியில் கொண்டுசெல்ல வேண்டுமெனபது அவரது குறிகோலாக
உள்ளது.

இதேவேளை தன்னுடைய முயற்சிக்கு அரச மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களின் உதவியை
எதிர்பார்ப்பதாக கூறும் கிருபைரட்ணம் ஒரு ஓய்வுபெற்ற தொழிநுட்பவியலாளர் என்பது குறிப்பிடத்தக்கது.
Batti-Ovejim
Batti-Ovejim-01
Batti-Ovejim-02
Batti-Ovejim-03
Batti-Ovejim-04
Batti-Ovejim-05
Batti-Ovejim-06
23 May 2014


No comments:

Post a Comment