Saturday, May 31, 2014

கொள்ளுப்பிட்டியில் வரிசையை முந்திச் செல்ல முயன்ற நபருக்கு கத்திக் குத்து !

வங்கி ஒன்றின் கொடுக்கல் வாங்கல் மேற்கொள்ள வரிசையில் நின்றவர்களை முந்தி சென்ற நபர் தாக்கப்பட்டு கத்தி குத்துக்கு இலக்காகி காயம் அடைந்துள்ளார்.
சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் கொழும்பு கொள்ளுப்பிட்டி பக்கதல வீதிக்கு அருகில் உள்ள வங்கி ஒன்றில் இடம்பெற்றுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக கொழும்பு 7 ரொஸ்மிட் பிளேஸ் பகுதியை சேர்ந்த பியாஸ் இக்பால் என்பவரை, கொள்ளுப்பிட்டி பொலிஸார் கைது செய்துள்ளனர்.
பக்கதலை வீதிக்கு அருகில் உள்ள வங்கியில் பணம் எடுப்பதற்காக சந்தேக நபரும் காயமடைந்தவரும் வரிசையில் நின்றிருந்த போது, இருவருக்கும் இடையில் வாய்த்தர்க்கம் ஏற்பட்டுள்ளது.
வாய்த்தர்க்கம் முற்றியதை அடுத்து சந்தேக நபர் மற்றைய நபரை தாக்கியதுடன் கத்தியால் குத்தி காயம் ஏற்படுத்தியுள்ளார்.
சந்தேக நபர் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்ட பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmsyFQVLZhv1.html

No comments:

Post a Comment