Friday, May 23, 2014

என்னை கொன்றது நீதானே: பூர்வஜென்ம கொலையாளியை காட்டிக்கொடுத்த குழந்தை (வீடியோ இணைப்பு)


சிரியாவில் மூன்று வயது சிறுவன் ஒருவன் தன்னை முற்பிறவியில் கொலை செய்த நபரை காட்டிக்கொடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சிரியாவில் உள்ள கோலன் ஹைட்ஸ் பகுதியை சேர்ந்த 3 வயது ஆண் குழந்தை பிறக்கும் போதே தலையில் சிறிய கோடு போன்ற அடையாளத்துடன் பிறந்ததாகக் கூறப்படுகிறது.
குழந்தைகள் இவ்வாறு பிறந்தால் அவர்கள் தங்களது முற்பிறவியை நினைவில் கொண்டிருப்பார்கள் என்பது அந்நாட்டின் ட்ருஸ் தனி இனக்குழுவின் நம்பிக்கையாகும்.
இந்த நம்பிக்கையை நிரூபிக்கும் வகையில் அச்சிறுவன் தனது மூன்று வயதில் பேச தொடங்கியபோது, தனது முன்பிறவி இரகசியங்களை கூறியுள்ளான்.
தனது பெயர் மற்றும் தான் வசித்த இடத்தை முதலில் கூறிய இச்சிறுவன் தன்னை கோடாரியால் முற்பிறவியில் ஒருவன் வெட்டிக் கொன்றதாக அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளான்.
மேலும் தன்னை புதைத்த இடத்தை மக்களுக்கு நேரில் சென்று காட்டியுள்ளான்.
இதுகுறித்து அங்கிருந்த மக்களிடம் விசாரித்த போது அச்சிறுவன் குறிப்பிட்ட மனிதன் அங்கு வசித்து வந்ததும், கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்னர் காணாமல் போனதும் உறுதி செய்யப்பட்டது.
இதனைதொடர்ந்து சிறுவன் கூறிய இடத்தில் தோண்டிபோது அங்கு ஒரு ஆணின் மண்டை ஓடும், கோடாரியும் இருப்பதை பார்த்த மக்கள் அதிர்ச்சியில் வாயடைத்து போயினர்.
இந்நிலையில் கொலையாளியை சிறுவன் அடையாளம் காட்டியதையடுத்து அந்நபர் கைது செய்யப்பட்டான்.
இச்சம்பவத்தை ஜேர்மனி நாட்டு தெரப்பிஸ்ட் ஆன டிரட்ஸ் ஹார்டோவிடம் நபர் ஒருவர் தெரிவித்ததால், அவர் இதை ஒரு புத்தகமாக எழுதியுள்ளார்.
எனினும் இச்சம்வம் நம்புக்கூடியதாய் இல்லை என்றும் இது வெறும் கட்டுக்கதை எனவும் சில மக்களால் விமர்சிக்கப்பட்டுள்ளது.
http://www.newsonews.com/view.php?22YOlR2bcg80C34edeMMa020BnB4dd3LBn5302o6AO2e4C08W2cbclOUe3

No comments:

Post a Comment