Thursday, May 29, 2014

பலாத்காரம் செய்யப்பட்டு தூக்கிலிடப்பட்ட சிறுமிகள்: உத்திரபிரதேசத்தில் கொடூரம்

உத்திரபிரதேசத்தில் 2 சிறுமிகள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, தூக்கிலிடப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உஸ்காய்த் பகுதியில் உள்ள காத்ரா கிராமத்தில் 14 மற்றும் 15 வயது கொண்ட இரண்டு சிறுமிகளை கடந்த செவ்வாய்கிழமை முதல் காணவில்லை.
இது தொடர்பாக சிறுமியின் பெற்றோர்கள் பொலிசில் புகார் கொடுத்துள்ளனர். ஆனால் புகாரை ஏற்றுக்கொள்ள பொலிசார் மறுத்துள்ளனர்.
இந்நிலையில் சிறுமிகள் இருவரும் கொடூர கும்பலால் கற்பழிக்கப்பட்டு கிராமத்தில் உள்ள மரத்தில் தூக்கிலிடப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ள நிலையில் நேற்று கண்பிடிக்கப்பட்டுள்ளனர்.
சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த கும்பலில் ஒருவனான பாபு யாதவை பொலிசார் கைது செய்துள்ளனர். மற்ற குற்றவாளிகள் தலைமறைவாகிவிட்டனர் என்று பொலிஸ் அதிகாரி மான் சிங் சவுகான் தெரிவித்துள்ளார்.
பொலிஸ் அதிகாரிகளின் அக்கறையின்மையினாலே இந்த கொடூர செயல் நடந்துள்ளது என்று பொதுமக்கள் குற்றம்சாட்டி போராட்டம் நடத்தியதை அடுத்து பொலிசார் 7 பேருக்கு எதிராக வழக்கு பதிவு செய்துள்ளனர்.

No comments:

Post a Comment