Thursday, May 22, 2014

நிறைமாத கர்ப்பிணிக்கு நிற்கவைத்து பிரசவம்: ராஜஸ்தானில் அரங்கேறிய கொடூரம்!

ராஜஸ்தான் மாநிலத்தில் லஞ்சம் கொடுக்க மறுத்த பெண்ணுக்கு நிற்க வைத்து பிரசவம் பார்க்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ராஜஸ்தான் மாநிலம் பாராத்பூரி பகுதியில் உள்ள மருத்துவமனை ஒன்றில் நிறைமாத கர்ப்பிணி ஒருவர் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அப்போது, அவருக்கு படுக்கை ஒதுக்கீடு செய்ய ரூ. 500 லஞ்சமாக கேட்டுள்ளனர். ஆனால் அந்த பெண் கொடுக்க மறுத்துள்ளார்.
இந்நிலையில் அந்த பெண் நிற்க வைத்து பிரசவிக்கப்பட்டுள்ளார், இதில் பிறந்த குழந்தை தரையில் மோதி உயிரிழந்தது.
இதுகுறித்து தகவல் அறிந்த பெண்ணின் உறவினர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மருத்துவமனை முன் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த சம்பவமானது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

No comments:

Post a Comment