Saturday, May 31, 2014

வெளிநாட்டுக்கு பெண்களை விற்கும் முகவர்கள்!

ஏழு பெண்களுடன் கொழும்பில் விபசார விடுதி முற்றுகை

குறித்த விடுதி சுற்றி வளைப்பின் போது இரத்மலானை, லுணுகல, வவுனியா தெஹிவளை, படால்கும்பு மற்றும் மாத்தளை பகுதிகளைச் சேர்ந்த தமிழ் சிங்களப் பெண்களை கைது செய்ததாகவும் இவர்களில் ஒருவர் 17 வயதுடையவர் எனவும் பொலிஸார் தெரிவித்தனர். கைது செய்த சந்தேக நபர்களை நீதிமன்றில் ஆஜர்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
http://www.jvpnews.com/srilanka/71196.html

சவூதியில் வெடித்த சிலிண்டரில் இலங்கை பெண் பரிதாப மரணம்..

வீட்டு வேலைக்காக சவூதிஅரேபியா சென்ற இலங்கை பெண்ணொருவர் சமையல் வாயு சிலிண்டர் வெடித்ததில், கிங் வைத்தியசாலையில் கோமாவில் இருந்த பின்னர் புதன்கிழமை (28) உயிரிழந்துள்ளதாக அரேபிய நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
கொழும்பிலிருந்து 50கிலோ மீற்றர் தூரத்தில் இருக்கும் ஒரு கிராமத்தை வசிப்பிடமாக கொண்ட குறித்த பெண் விவாகரத்தான நிலையில் தனது இரண்டு மகன்மார்களுடன் வாழ்ந்து வந்துள்ளார். கடந்த 15 மாத காலமாக சவூதிஅரேபியாவில் வீட்டு பணிப்பெண்ணாக கடமையாற்றி வருகின்றார். சிலிண்டர் வெடித்ததில் அவருடைய உடலில் பல இடங்களில் தீக்காயங்கள ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
அவருடைய பூதவுடலை நல்லடக்கம் செய்வது தொடர்பாக அரேபியாவுக்கான இலங்கை தூதரகம் ஏற்பாடு செய்வதாகவும், அவருடைய சம்பளத்தை வேலை செய்த இடத்திலிருந்து பெற்றுக்கொடுப்பதற்கு பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தூதரக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
http://www.jvpnews.com/srilanka/71227.html

வெளிநாட்டுக்கு பெண்களை விற்கும் முகவர்கள்!

வெளிநாட்டு பணிப் பெண் வேலை வழங்குகின்றார்கள் என்று பெண்களை குறிப்பாக யுவதிகளை நம்ப வைத்து விபாச்சாரிகளாக விநியோகிக்கின்றனர் என்று வெளிச்சத்துக்கு வந்து உள்ளது.
இவ்வாறான செயற்பாடுகளில் பெரும்பாலும் முஸ்லிம் முகவர்களே ஈடுபட்டு உள்ளனர் என்று சிங்கள இணையங்கள் செய்திகள் பிரசுரித்து உள்ளன.

இவ்விதம் ஏமாற்றப்பட்டு டுபாய் நாட்டுக்கு அனுப்பப்பட்ட பெண் ஒருவர் திரும்பி வந்த பிற்பாடு இப்பயங்கரத்தை வெளிப்படுத்தி உள்ளார்.
http://www.jvpnews.com/srilanka/71256.html
Forinwumain

No comments:

Post a Comment