Wednesday, May 28, 2014

இளம் பெண் கல்லால் அடித்துக் கொலை - பாகிஸ்தானில் கொடூரம்!

பாகிஸ்தானில் இளம் பெண்ணொருவர் உறவினர்களால் கல்லால் அடித்து கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம், பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பாகிஸ்தானின், லாகூர் நகரை சேர்ந்த 25 வயதான பர்ஷானா இக்பால் என்ற பெண்ணே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,
குறித்த பெண்ணுக்கு வேறு இடத்தில் மாப்பிளை பார்த்து திருமணத்திற்கு ஏற்பாடு செய்து வந்தனர். ஆனால் அந்த பெண் வேறு ஒரு நபரை காதலித்து பெற்றோரின் சம்மதமில்லாமல் திருமணம் செய்துகொண்டார்.
இது தொடர்பில் நீதிமன்றில் வழக்குத் தொடரப்பட்டிருந்தது. இதற்காக குறித்த பெண் பர்ஷானா உயர்நீதிமன்றக் கட்டிடத்துக்குள் நின்று இருந்தார்.
அப்போது அவரது தந்தை, சகோதரர்கள் மற்றும் உறவினர்களில் ஒருவர் ஆகியோர் சேர்ந்து அவரை பிடித்து வைத்துக்கொண்டு, கற்களால் அவரின் தலையில் தாக்கினர் . இதில் அந்த பெண் தலையில் பலத்த காயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். எனினும் சிகிச்சை பலனின்ற உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

அவரது தந்தையைத் தவிர பெண்ணை தாக்கிய அனைவரும் தப்பியோடிவிட்டனர். அவரது தந்தை கைது செய்யப்பட்டிருக்கிறார். குடும்ப கௌரவத்தை காப்பாற்ற என்று பெண்களைக் கொலை செய்வது  பாகிஸ்தானில் நீண்ட காலமாக நடந்து வரும் ஒரு செயல். இது குறித்து மனித உரிமைக் குழுக்கள் கவலை வெளியிட்டு வருகின்றன.

பாகிஸ்தானில் வருடம் தோறும் ஆயிரகணக்கான பெண்கள் இந்த கௌரவ கொலைக்கு பலியாகிறார்கள்.

No comments:

Post a Comment