சமீபகாலமாக ஸ்ருதிஹாசனின் ஆபாச புகைப்படங்கள் இண்டர்நெட்டில் பரவிவருவதால் அதிர்ச்சி அடைந்த ஸ்ருதிஹாசன் தன்னுடைய ஆபாச படங்களை இண்டர்நெட்டில் வெளியிட்டவர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என போலீஸில் புகார் அளித்துள்ளார்.
இதுகுறித்து போலீஸார் விசாரணை செய்து வருகின்றனர். எவடு படத்தின் படப்பிடிப்பின்போது தான் இந்த புகைப்படம் எடுக்கப்பட்டதால் அந்த படத்தில் பணிபுரிந்த போட்டோகிராபர்களை போலீசார் விசாரணை செய்கின்றனர். போலீஸாரின் இந்த நடவடிக்கை தெலுங்கு படவுலகினரை அதிர்ச்சி அடைய செய்துள்ளது.
ஸ்ருதிஹாசன் எவடு படத்தை விட மிக அதிக அளவில் கவர்ச்சியாக பாலிவுட்டிலும், தெலுங்கு படங்களிலும் நடித்துள்ளார். அப்போதெல்லாம் டென்ஷன் ஆகாத ஸ்ருதிஹாசன் இப்பொழுது மட்டும் கோபப்பட்டு புகார் கொடுப்பது ஏன் என்று தெலுங்கு பட திரையுலகினர் கடும் அதிருப்தியை தெரிவித்துள்ளனர்.
பணம் கிடைக்கிறது என்பதற்காக கவர்ச்சியான போஸ்களை கொடுத்துவிட்டு, பின்னர் அந்த புகைப்படங்களை இண்டர்நெட்டில் வெளியிடக்கூடாது என்று சொல்வதற்கு ஸ்ருதிஹாசனுக்கு எவ்வித உரிமையும் இல்லை என்று ஆவேசமாக தெலுங்கு படவுலகினர் தெரிவித்துள்ளனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு தி டே என்னும் இந்தி படத்தில் விபச்சாரியாக அரைநிர்வாண காட்சிகளில் நடித்த ஸ்ருதிஹாசன் பின்னர் அந்த படம் தமிழில் வெளிவர எதிர்ப்பு தெரிவித்து வழக்கு போட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
பணத்துக்காக விபச்சாரியாக நடிக்க துணிந்த ஸ்ருதிஹாசன், ஆபாசப்புகைப்படம் குறித்து பேசுவதற்கு எந்தவித தார்மீக உரிமையும் இல்லை என்று புகைப்படக்கலைஞர் ஒருவர் தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளார். இதனால் தெலுங்கு படவுலகில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
No comments:
Post a Comment