Saturday, May 24, 2014

மேர்வின் சில்வாவின் ஆதரவாளரை ஏன் கொலை செய்தேன்: கூறுகிறார் பிரதான சந்தேக நபர்!

தமது நெருங்கிய நண்பரை காணாமல்போகச் செய்த காரணத்திற்காக பேலியகொட நகரசபையின் உறுப்பினர் சமில சந்தருவன் என்பவரை கொலை செய்ததாக பிரதான சந்தேக நபர் தெரிவித்துள்ளார்.
டி.மஞ்சு என்றழைக்கப்படும் நபரே இந்த சம்பவத்தின் பிரதான சந்தேக நபராக கைது செய்யப்பட்டுள்ளார்.
அண்மையில் சமில சந்தருவான் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி கொல்லப்பட்டார்.
கொலைக்கு உதவி வழங்கியவர், சமில குறித்த உளவுத் தகவல்களை வழங்கியவர், துப்பாக்கிச் சூடு நடாத்தும்போது மோட்டார் சைக்கிளை செலுத்தியவர் ஆகியோரையும் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
ஓராண்டுக்கு முன்னதாக பேலியகொட பிரதேசத்தில் நாம் இசை நிகழ்வு ஒன்றில் பங்கேற்ற போது, உயிரிழந்த சமில மற்றும் அவரது ஆதரவாளர்கள் கடுமையாக எம்மை தாக்கியதுடன், கத்தியாலும் குத்தினர்.
இந்த சம்பவத்தின் பின்னர் சமிலவுடன் நாம் கோபித்துக் கொண்டிருந்தோம்.
நெருங்கிய நண்பர் ஒருவரை சமில காணாமல் செய்தார் எனவும் அதற்கு பழி தீர்க்கும் நோக்கில் அவரை கொலை செய்ததாகவும் கைது செய்யப்பட்ட மஞ்சு என்ற பாதாள உலகக் குழு உறுப்பினர் பொலிஸாரிடம் வாக்கு மூலம் அளித்துள்ளார்.
மஞ்சுவிற்கு எதிராக ஐந்து பிடிவிராந்து உத்தரவுகள் காணப்படுவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பாலியல் வன்கொடுமை, சட்டவிரோத ஆயுத பயன்பாடு உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுக்கள் மஞ்சு மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
நீர்கொழும்பில் மறைந்திருந்த போது சந்தேக நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கொல்லப்பட்ட பேலியகொட நகரசபையின் உறுப்பினர் சமில அமைச்சர் மேர்வின் சில்வாவின் தீவிர ஆதரவாளர் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment