Saturday, April 26, 2014

பேஸ்புக்கால் எழுந்த சண்டை: கர்ப்பிணி வயிற்றில் துப்பாக்கியால் சுட்ட பெண்.....

அமெரிக்காவில் பேஸ்புக்கில் விவாதிப்பாவர்களின் எண்ணிக்கை அதிகமாகி வருகிறது. இதனால் ஒருவருக்கொருவர் சண்டையிட்டு கொண்டு குற்ற செயல்களில் ஈடுபடுவதும் அதிகமாகி வருகிறது.

அடுத்தவர் புகைப்படங்களை தவறாக பயன்படுத்துவது நேரிலேயே சென்று சண்டையிடுவது என குற்றங்கள் அதிகரித்து உள்ளது.
லிலியன் ஜோர்டன் என்ற பெண்ணுக்கும் வெர்ஜினியா வெய்ஸ் என்பவருக்கும் பேஸ்புக்கில் தொடர்ந்த வாக்குவாதம் பெரும் ஆபத்தில் முடிந்துள்ளது. லிலியன் ஜோர்டன் கர்ப்பமாக இருந்தார்.
பேஸ்புக்கில் தொடங்கிய இவர்களின் வாக்குவாதம் விரோதமாக மாறி வெர்ஜினியா வெய்ஸ் லிலியன் ஜோர்டன் வீட்டிற்கு சென்று அவரது வயிற்றில் துப்பாக்கியால் சுட்டார் இதில் வயிற்றில் இருந்த குழந்தை இறந்தது.
ஜோர்டனின் உறவினர்கள் உடனடியாக போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். மேலும் ஜோர்டனுக்கு முதலுதவி செய்தனர்.பின்னர் அவர் மருத்துவ மனையில் சேர்க்கப்ட்டார்.வெர்ஜினியா வெய்ஸ் கைது செய்யபட்டார்.

No comments:

Post a Comment