கனடாவைச் சேர்ந்த பெண் பொலிஸ் அதிகாரியை கற்பழித்த 4 பிரான்ஸ் பொலிஸ் அதிகாரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கனடாவை சேர்ந்த 34 வயது பெண் பொலிஸ் அதிகாரி ஒருவர் கடந்த செவ்வாய்க்கிழமை பிரான்ஸ் நாட்டின் தலைநகர் பாரீஸ் நகருக்கு சென்றுள்ளார்.
அங்கு பாரீஸ் பொலிஸ் தலைமையகத்தில் பிற பொலிஸ் அதிகாரிகளுடன் தீவிரவாதிகள் குறித்த ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்டார். கூட்டத்தில் நான்கு அதிகாரிகளும் கனடாவின் பெண் பொலி1 அதிகாரியை கற்பழித்ததாக கூறப்படுகிறது.
பாதிக்கப்பட்ட பெண் பாரீஸ் நகர உயர் அதிகாரியிடம் புகார் கொடுத்தார். புகாரின் அடிப்படையில் குற்றம் சாட்டப்பட்ட நான்கு பொலிஸ் அதிகாரிகளுக்கு டி.என்.ஏ டெஸ்ட் எடுக்கப்பட்டது. அவர்கள் நான்கு பேர்களும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
இந்த சம்பவம் குறித்து பிரான்ஸ் நாட்டின் உள்துறை அமைச்சர் பெர்னார்ட் கேஎஸ்னிவ் கூறுகையில், இந்த சம்பவத்திற்கு கனடா பெண் பொலிஸ் அதிகாரியிடம் வருத்தம் தெரிவித்ததோடு, டி.என்.ஏ. டெஸ்ட் ரிசல்ட் வந்ததும், பொலிஸ் அதிகாரிகள் குற்றம் செய்தது நிருபிக்கப்பட்டால் அவர்கள் நான்கு பேர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்துள்ளார்.
http://world.lankasri.com/view.php?224MM303lOo4e2BnBcb280Cdd308Mbc3nBTe42OlT0236Ao3
|
No comments:
Post a Comment