Thursday, April 24, 2014

நடிகையுடன் மல்லுக்கட்டிய ஆட்டோ ஓட்டுநர் கைது

தொலைக்காட்சி நடிகையின் காரை சேதப்படுத்தி ஆட்டோ ஓட்டுநர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மும்பை கோரேகாவ் பகுதியை சேர்ந்த தொலைக்காட்சி நடிகை மோனாஸ். இவர் பகல் 1 மணி அளவில் மலாடு மத் பகுதியில் நடந்த படப்பிடிப்புக்காக தனது காரில் சென்று கொண்டிருந்தார்.
எஸ்.வி. ரோடு அருகே வந்தபோது, காரை சிக்னலுக்காக நிறுத்தியுள்ளார். அப்போது அவரது கார் முன்பு ஒரு ஆட்டோ நின்று கொண்டிருந்தது.
சிக்னல் விழுந்த நிலையில் ஆட்டோ நகராமல் அங்கேயே நின்றது. இதையடுத்து மோனாஸ் கீழே இறங்கி ஆட்டோ ஓட்டுநர் ஹைதர் அப்பாசிடம்(26) வாக்குவாதம் செய்தார்.
வாக்குவாதம் முற்றியதில் ஆத்திரம் அடைந்த ஹைதர் அப்பாஸ், மோனாசை இழிவாக திட்டியதோடு மட்டுமல்லாமல், தான் வைத்திருந்த உருட்டு கட்டையால் காரை அடித்து சேதப்படுத்திவிட்டு அங்கிருந்து தப்பிச்சென்று விட்டார்.
இதுகுறித்து மோனாஸ் கோரேகாவ் பொலிசில் அளித்த புகாரின்பேரில் பொலிசார் வழக்கு பதிவு செய்து ஆட்டோ ஓட்டுநர் ஹைதர் அப்பாசை கைது செய்தனர்.

No comments:

Post a Comment