Friday, March 28, 2014

ரொனி பெனின் இறுதி வணக்க நிகழ்வு: பெருமளவானோர் கண்ணீர் மல்க அஞ்சலி!

பிரித்தானியாவில் பல ஆண்டு காலமாகக் தமிழீழ மக்களுக்காகக் குரல்கொடுத்த மூத்த அரசியல்வாதி ரொனி பெனின் இறுதி வணக்க நிகழ்வு நேற்று வெஸ்ட்மின்ஸ்டர் செயின்ட் மார்கரெட் தேவாலயத்தில் நடைபெற்றது.
88 வயதுடைய மூத்த அரசியல்வாதி ரொனி பென் இரு வாரங்களுக்கு முன்பு லண்டனில் இறந்தார்.
இறுதி வணக்க நிகழ்வில் சுமார் 750 அரசியல்வாதிகள் பிரித்தானியாவின் முன்னால் பிரதமர் டோனி பிளேயரின் மனைவி செர்ரி பிளேயர், தொழிற்கட்சித் தலைவர் எட் மிலிபாண்ட் மற்றும் மக்கள் ஏராளமானோர் திரண்டிருந்து கண்ணீர் மல்க இறுதி அஞ்சலி செலுத்தினர். மதியம் அவரது உடல் தகனம் செய்யப்பட்டது.

இறுதி வணக்க நிகழ்வில் குறிப்பிட்ட சில தமிழரும் கலந்து கொண்டார்கள்.

No comments:

Post a Comment