Saturday, February 15, 2014

காதலர்கள் மீது அழுகிய தக்காளி வீச்சு /பாராட்டுக்கள்!

குஜராத் மாநிலம் ஆமதாபாத் நகரின் சபர்மதி ஆற்றங்கரையில் குழுமியிருந்த காதலர்கள் மீது நேற்று பஜ்ரங் தளம் மற்றும் விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்புகளின் தொண்டர்கள் அழுகிய தக்காளிகளை கொண்டு தாக்குதல் நடத்தியுள்ளனர்.
இச்செயலால் அதிர்ச்சியடைந்த காதலர்கள் தங்களை காப்பாற்றிக் கொள்ள அந்த இடத்தில் இருந்து தப்பி ஓடினர்.
காதலர்கள் தினத்தை முன்னிட்டு நேற்று காலை சபர்மதி ஆற்றங்கரையில் நூற்றுக்கணக்கான காதல் ஜோடிகள் கூடி, காதலர் தினத்தை கொண்டாடிக் கொண்டிருந்தனர். அப்போது அதிரடியாக அங்கு வந்த பஜ்ரங் தளம் மற்றும் விஸ்வ ஹிந்து பரிஷத் ஆதரவாளர்கள் அழுகிய தக்காளிகளால் காதலர்களைத் தாக்கினர். இச்செயலால் அதிர்ச்சியடைந்த காதலர்களில் பலர் தங்களது கார்களை நோக்கி ஓடினர். பலர் மறைவிடங்களை நோக்கி ஓடினர்.
காதலர் தினத்தை ஒழுக்கமற்ற தினமாக அறிவித்து, இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, ஆமதாபாத் நகரில் நேற்று இந்த இரண்டு அமைப்பினரும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இறுதியாக காதலர் தின வாழ்த்து அட்டைகளை தீயிட்டுக் கொளுத்தினர்.
http://www.newindianews.com/view.php?22KMC203lOe4e2DmKcb240Mdd304obc2mDXe42OlJ0236AS3

No comments:

Post a Comment