Monday, February 10, 2014

குழந்தைகளுக்கு மது பருக்கி, கள்ளக் காதலனுடன் உல்லாசம் அநுபவித்த தாய்! - திருச்சியில் சம்பவம்


திருச்சி அரசு வைத்தியாலைக்கு இன்று காலை ஒரு பெண் 2 குழந்தைகளுடன் பதறியபடி சென்றுள்ளார். அக்குழந்தைகள் மயக்க நிலையிலேயே இருந்துள்ளன.

உடனடியாக அக்குழந்தைகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளன. அக்குழந்தைகளுக்கு என்ன நேர்ந்த்து? என்று கேட்கப்பட்டபோது வந்த விடையானதுஅனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. இதற்குக் காரணம் குழந்தைகளின் தாய் பாத்திமா அவரது கணவர் ஜலால் என்பவர் அவரை விட்டு பிரிந்து சென்றுவிட்டதால் தனது 2 குழந்தைகளுடன் திருச்சி நத்தர்ஷா பள்ளிவாசல் பகுதிகளில் பிச்சை பெற்று பிழைப்பு நடாத்திவந்துள்ளார்.

அவர்களுக்கு தங்க வீடு எதுவும் இல்லாத்தனால் தெரு மற்றும் “பிளாட்“பாரங்களில் தங்கியிருந்து வருகின்றார். இந்நிலையில் நேற்றிரவு பாத்திமாவை தேடி வாலிபர் ஒருவர் வந்துள்ளார். அப்போது குழந்தைகள் இருவரும் தூங்காமல் விளையாடிக் கொண்டிருந்துள்ளனர்.

இது அவர்களுக்கு சிரமத்தையும் கோபத்தையும் கொடுக்க, அந்த வாலிபன் கொண்டுவந்த மதுவை வாங்கிய பாத்திமா, தனது குழந்தைகளான யாஷிக் அன்சாரி (5), பரக்கத் நிஸா (2 1/2) இருவருக்கும் அதனைக் கொடுத்துள்ளனர். அதனைக் குடித்த சிறிது நேரத்தில் இருவரும் மயங்கி விட்டிருக்கின்றனர். அவர்கள் மயங்கிவிழுந்த்தன் பின்னர் பாத்திமாவும் வந்த வாலிபனும் உல்லாசம் அனுபவித்துள்ளனர்.

காலையில் வழக்கம்போல, தாய் பாத்திமா குழந்தைகள் இருவரையும் எழுப்பியுள்ளார். என்றாலும், பிள்ளைகள் எழுந்திருக்கவில்லை. பதற்றம் அடைந்த பாத்திமா குழந்தைகள் இருவரையும் அரச வைத்தியசாலைக்கு எடுத்துச் சென்றுள்ளார்.

இத்தகவல் பொலிஸாருக்கு தெரியவந்த்தையடுத்து, பாத்திமாவிடம் விசாரணைகளை நடாத்த பொலிஸார் உசாராகியுள்ளனர். பாத்திமாவுடன் உல்லாசம் அனுபவித்து வந்த அந்த வாலிபன், அவரது தாயாரின் கள்ளக் காதல் எனத் தெரியவந்துள்ளது.

இவ்வாறான பல அத்துமீறல்கள் திருச்சியின் பல பகுதிகளில் நடைபெற்றுவருகின்றன எனத் தெரியவருகின்றது.http://www.ilankainet.com/2014/02/blog-post_9.html

No comments:

Post a Comment