Friday, February 28, 2014

அமரர் கந்தையா செல்வகுமார் 1ம் ஆண்டு நினைவஞ்சலி!!

                                                   
தோற்றம் : 4 ஏப்ரல் 1964 — மறைவு : 13 மார்ச் 2013
                                                                     திதி :
 2 மார்ச் 2014

யாழ். குப்பிளானைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Rorschach ஐ தற்காலிக வசிப்பிடமாகவும் கொண்டிருந்த கந்தையா செல்வகுமார் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஆண்டு ஒன்று ஆனதுவோ அப்பா!
உங்கள் திருவதனம் எப்படி நாங்கள் மறப்போம் அப்பா!
நீண்டு செல்லும் நாட்களின்
நிழல் வடிவில் தெரிகின்றீர்கள் அப்பா!
நித்திரையில்கூட எம் கண்களில் நீங்கள் தானே

எத்தனை தான் காலத்தோடு கலந்து போனாலும்
என் அன்பு கொண்ட உள்ளம் சொல்லும் ஒரு
ஆறுதல் வார்த்தை போல் வேறொன்றுமில்லையே அப்பா..!

நாம் கடந்து வந்த பாதையை பார்க்கிறோம் நல்லதே நினைப்போம்
நமக்கு நல்லதே நடக்கும் என்பீர்கள் அப்பா.! ஆனால்
நல்லவனுக்கோ குறைந்த ஆயுள் தான்
என்று சொல்லவில்லையே அப்பா.!

உரிமை கொள்ள உறவுகள் ஆயிரம் இருந்தாலும்
உள்ளத்தைப் புரிந்துகொள்ள உங்களைப் போல்
யாருமே இல்லையே அப்பா.!

ஒரு மனதாய் நாங்கள் இணைந்த திருமணவாழ்வுதனில்
27 வருடங்கள் இனிதாகக் கடந்தாலும் இன்பமாய் காலமெல்லாம்
வாழ்வோமென்று இனிதாக வைத்திருந்த எமதுள்ளக்கனவுகளை
கண்ணீரின் கதையாக்கி கண்ணுக்குள் நிழலாட
அப்பா அப்பா அப்பா என்று நாம் கதறக் கதறக்
கடவுளிடம் ஏன் விரைந்து சென்றீர்கள் அப்பா!

கண்ணின் மணிப்போல் நீங்கள் பெற்று
வளர்த்த கண்மணிகள் வாழ்வில் கலக்கமின்றி பயணிக்க
கலங்கரைத் தீபமாய் அன்போடு காத்து நிற்பீர்கள் என்று
மனம்மகிழ கடும்புயலாக வந்ததுவோ கொடியநோய்
உயிரைக் காவு கொண்டதுவோ.!

ஆண்டு ஒன்றென்ன ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும் உங்கள்
நினைவலைகள் எங்களுடன் வாழும் அப்பா!
உங்கள் வார்த்தைகள் எங்களை வழிநடத்த நீங்கள் இருக்கின்றீர்கள்
என்ற நினைவோடு நீதி நெறி தவறாமல்
எங்களின் காவல் தெய்வமாக நீங்கள் வழிநடத்த உறுதியாக
வாழ்ந்துகொண்டே இருப்போம் அப்பா...

ஓம் சாந்தி... ஓம் சாந்தி.... ஓம் சாந்தி
என்றென்றும் உங்களின் நினைவுகளைச் சுவாசித்துக்கொண்டிருக்கும்
ஆருயிர் மனைவி, பிள்ளைகள், மருமகன்
தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
இந்துசன்(மருமகன்) — சுவிட்சர்லாந்து
செல்லிடப்பேசி:+41765495453
- — சுவிட்சர்லாந்து
தொலைபேசி:+41718451880

No comments:

Post a Comment