Saturday, December 28, 2013

சாவகச்சேரியில் பெண் மீது ஐவர் இணைந்து துஷ்பிரயோகம்: பாதிக்கப்பட்டவர் பொலிஸில் புகார்

வவுனியாவில் இருந்து பேருந்தில் யாழ்ப்பாணம் வந்து கொண்டிருந்த பெண்ணொருவரை சாகச்சேரி பகுதியில் வைத்து ஏமாற்றி அழைத்துச் சென்ற 5 பேர், கூட்டாக பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக பாதிக்கப்பட்ட பெண் சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
இது குறித்து பொலிஸார் நீதிமன்றில் அறிக்கை தாக்கல் செய்துள்ளனர். எனினும் எவரும் கைது செய்யப்படவில்லை என யாழ்.பிராந்திய சிரேஸ்ர பொலிஸ் அத்தியட்சவர் விமலசேன தெரிவித்தார்.
கடந்த 24 ஆம் திகதி வவுனியாவில் யாழ்ப்பாணம் நோக்கி வந்துகொண்டிருந்த தன்னை சாவகச்சேரி பகுதியில் வைத்து ஏமாற்றி அழைத்துச் சென்று ஐவர் இணைந்து இ;க்குற்றத்தைப் புரித்துள்ளதாக பாதிக்கப்பட்ட பெ;ண் தனது முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார் எனவும் அவர் மேலும் கூறினார்

No comments:

Post a Comment