Sunday, September 1, 2013

புத்தளத்தில் சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த முதியவர் கைது !



12 வயதான பாடசாலை மாணவியை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாக கூறப்படும் 62 வயதான நபரை தாம் கைதுசெய்துள்ளதாக புத்தளம் மாவட்டம் வென்னப்புவை பொலிஸார் தெரிவித்தனர்.
துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்ட சிறுமி வென்னப்புவை வில்லியம் மாவத்தையில் உள்ள வீடொன்றில் தமது தாய் மற்றும் இரண்டு சகோதரிகளுடன் வசித்து வந்துள்ளார்.
வாடகை வீடான இந்த வீட்டின் உரிமையாளரினால் சிறுமி துஷ்பிரயோகப்படுத்தப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
2011 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் ஒரு தினத்தில் இருந்து கடந்த 29 ஆம் திகதி வரை சந்தேக நபர் அவ்வப்போது இந்த சிறுமியை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தி வந்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சம்பவம் பற்றி அறிந்துக்கொண்ட சிறுமியின் தாய், அது குறித்து வென்னப்புவை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்தார். இதனையடுத்து சந்தேக நபரை பொலிஸார் கைது செய்துள்ளார்.
பாதிக்கப்பட்ட சிறுமி மருத்துவ பரிசோதனைக்காக மாரவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சந்தேக நபர் மாரவில நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட உள்ளதுடன் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
- See more at: http://www.tamilwin.net/show-RUmryJTVMWms4.html#sthash.zN15j7Is.dpuf

No comments:

Post a Comment