Tuesday, August 6, 2013

அழகிகளுடன் உல்லாசத்தில் ஈடுபட்ட நீதிபதிகள் !

சீனாவில் உயர் பதவிகளில் வகிக்கும் சிலர் ஊழல் செய்து கோடிக்கணக்கில் சொத்து சேர்த்தது, இளம்பெண்களுடன் உல்லாசமாக இருந்தது போன்ற சட்டவிரோத நடவடிக்கைகள் கண்டுபிடிக்கப்பட்டன. அவர்களில் சிலருக்கு கடும் தண்டனை வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில், வர்த்தக நகரமான ஷாங்காய் சிவில் கோர்ட் நீதிபதிகள் சென் சூமிங், ஷா மின்குவா மற்றும் ஊழியர்கள் இன்டர்நெட் மூலம் பாலியல் தொழிலாளிகளை அழைத்து உல்லாசமாக இருந்ததாக புகார் எழுந்துள்ளது. இதனால் சீனாவில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. 

இதுகுறித்து விசாரணை நடத்த சீன அரசு உத்தரவிட்டது. இதையடுத்து நீதிபதிகள் உள்பட 4 பேரிடமும் தீவிர விசாரணை நடத்தப்பட்டது. அப்போது ஷாங்காயில் உள்ள ஹெங்ஷான் என்ற ரிசார்ட்டில் பாலியல் அழகிகளுடன் கடந்த ஜூன் 9 ஆம் தேதி இரவு இவர்கள் உல்லாசமாக இருந்துள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது. குற்றம் நிரூபிக்கப்பட்ட நிலையில் 4 பேருக்கும் கடும் தண்டனை கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சீனாவில் பாலியல் தொழிலை தடுக்க அரசு கடும் நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்நிலையில் நீதிபதிகள், கோர்ட் ஊழியர்கள் விபசாரத்தில் ஈடுபட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

இதுகுறித்து நகராட்சி ஒழுங்குமுறை கமிஷன் விசாரணை நடத்தி வருகிறது. வெட்க கேடான இந்த செயலை செய்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment