Thursday, August 8, 2013

படித்த முட்டாளின் பார்வை:பெண்கள் அதிகம் சாமியார்களை தேடி ஓடுவது ஏன்?

பெண்கள் அதிகம் சாமியார்களை தேடி ஓடுவது ஏன்?

சாமியார்...
பெண்களுக்கு நிறைய பிரச்சினை கள் இருக்கு. வீட்ல ஒரு குடும்பப் பெண்ணுக்கு பிரச்சினைகள் எக்கச் சக்கமா இருக்கு. கணவன், மனை வி பிரச்சினை, மாமியார், மரும கள் பிரச்சினை, நாத்தனார் பிரச்சினை, குழந்தைகள வளர்க்கறதுல பிரச்சி னை, பக்கத் துல வீட்ல பிரச்சினை . இதனால் அவர்களுக்குள்ள ஒரு தாழ்வு மனப்பான்மை வந்து டுது.
நாம படிச்சிருந்தா, இப்படி ஆயிருக்காதே, இப்படி உட்கார்ந்திருக்க வே ண்டியிருக்காதேன்னு அவங்களுக்குள்ள எக்கச்சக்கமான மன வருத்த ங்கள், மன ஏமாற்றங்கள் இருக்கத்தான் செய்யுது. இத பக்கத்து வீட்ல சொன்னா, யார் கிட்டயாவது சொல்லி மாட்டி விட் ருவாங்க. இல்ல, நம்மள பார்த்து சிரிப் பாங்க. நம்மளப்பத்தி தாழ்வா நினைப் பாங்கன்னு எண்ணம் இருக்கலாம். இல்ல, வெளி ஆளுங்க கிட்ட சொன்னா அவங்க, அதை சொந்தக்காரங்ககிட்ட சொல்லிட்டா, நாளைக்கு அவங்க முக த்தில முழிக்க ணு மே என்ற பயம் இருக் கலாம். அத னால, சாமியார்கிட்ட போறா ங்க. அவங்க எதிர்பார்க்கிறது, தன்னை எந்தக் குறையும் சொல்லாம, இல்லம்மா கவலைப்படாதே; எல்லாம் சரியாய் போயிடுமுங்கிற ஆறுதலைத்தான். இந்த ஆறுதலை சாமியார் சரியா சொல்றதுனால தான் அவங்ககிட்ட போறாங்க.
நம்ம இதிகாசங்கள்ல பாத்தீங்கன் னா குழந்தை எப்படி பொறக்கணும் னு வெட்ட வெளிச்சமா சொல்ற தில் இராமாயணத் துல உதாரணம் எடுத்து க்கிட்டோம்னா, பாயாசம் கொடுத்தாங்க, அந்த பாயாசத் தை உட்கொண்டதுனால குழந்தை பொற ந் ததுன்னு சொல்றாங்க. அவங்க பாயாச ம்னு சொல்றது எதைங்கறத அறிவியல் தெரிஞ்சவங்களால புரி ஞ்சிக்க முடியும். ஏன்? லட்டுன்னு சொல்லலே. ஏன்? பாயாசம்னு சொன் னாங்க. பாயாசம்ங்கிறது இன்னொரு விதமான மாற்று உபயோகமுள் ள வார்த் தைங்கிறது நமக்கு புரியுது. ஆனா, சாதா ரண மனிதர்கள் என்ன நினை ப்பாங்க. உண்மையிலேயே சாமியார் பாயாசம் கொடுத்ததுனால தான் குழந்தை பொறந் திச்சுன்னு நினைப்பாங்க.
இந்த மாதிரி நம்ம கலாச்சாரத்துல நிறை ய மூடநம்பிக்கைகள் இருக்க றதுனால, இதுஅதிகமாக பெருகிகிட்டு இருக்கு. அது மட்டுமல்ல, குழந்தை இல்லாத பெண்ணை இந்த சமுதாயம் பார் க்கிற விதமும் அவங்கள டெஸ்பரோட்டாக்கி, எப்படியாவது குழந்தை பொறந்தா போதுங்கிற சூழ்நிலைக்கு தூண்டப்பட்டு, சரி, சாமியார் தவ றாக நடந்து கொண்டாலு ம் பரவாயில்ல – இப்படியாவது குழந்தை பொ றந்தா போதுமுங்கிற எண்ணமும் பெண் களுக்கு வர்றதுக்கு வாய்ப்பு இருக்கு. குழ ந்தை இல்லாத பெண்களும் சாதாரண மனிதர்கள்தான் அவ ங்களுக்கும் வாழற துக்கு எல்லா உரிமைகளும் இருக்கு. எந்த தகுதியும் குறைஞ்சு போயிடலேங் கிற பரந்த மனப்பான்மை நமக்குள்ள இருந்ததுன்னா, குழந்தை இல்லாத பெ ண்களை நல்லவிதமா இன்னும் மரியா தையோட நாம நடத்துனும்னா இந்த மாதிரி ஒரு அவசர கதியில போ யி எப்படியாவது குழந்தை பெத்துக்கணும்ங்கிற எண்ணம் இல்லாம போயிடும்.
- மனநல மருத்துவர் ஷாலினி

No comments:

Post a Comment