இதனைச் சாதகமாகப் பயன்படுதிய அன் நபர், குறிப்பிட்ட தனது காதலியுடன் உல்லாசமாக ஊர் சுற்றியிருக்கிறார். இறுதியில் ஆடிச் செவ்வாய் அன்று அவர் தெல்லிப்பளையில் உள்ள கோவில் ஒன்றுக்கு தனது காதலியுடன் சென்றுள்ளார். அது நாள் வரை பொறுத்திருந்த மனைவி அன்று பொங்கி எழுந்துள்ளார். தனது உற்றார் உறவினர்களுடன் சென்ற மனைவி, கோவில் வாசலில் வைத்தே தனது கணவையும் அவரது கள்ளக் காதலியையும் சரமாரியாகத் தாக்கியுள்ளார். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பக்தர்கள் மனைவியை சமாதானப்படுத்தி பொலிஸ் நிலையம் அழைத்துச் சென்றுள்ளார்கள். புலிகள் யாழ்பாணத்தை தமது கட்டுப்பாட்டில் வைத்திருந்த கால கட்டத்தில் இதுபோன்ற செயல்கள் நடைறவே இல்லை என்று தற்போதுதான் யாழ்ப்பாண வாசிகள் பேச ஆரம்பித்துள்ளார்கள்.
இதுபோன்ற குற்றச்செயல்களுக்கு பச்சமட்டையால் அடி விழும் என்று பலருக்கு அன்று நன்றாகவே தெரியும். ஆனால் இன்று யாழ்ப்பாணம் கட்டுப்பாட்டை இழந்து காணப்படுவது மிகவும் மனவேதனை தரும் விடையமாக உள்ளது என்கிறார்கள் தெல்லிப்பளையில் வசிக்கும் அயலவர்கள்.
No comments:
Post a Comment