Sunday, August 4, 2013

இளகிய மனம் உள்ளவர்கள் பார்க்கவேண்டாம்

இளகிய மனமுள்ளவர்கள் இந்த வீடியோவைப் பார்க்கவேண்டாம் ! சமீபத்தில் பிரித்தானியாவில் பொலிசாரால் எடுக்கப்பட்ட திடுக்கிடும் வீடியோ ஒன்று வெளியிட்டப்பட்டது. இது பல்லாயிரக்கணக்கான மக்களை அதிர்சியில் ஆழ்த்தியுள்ளது. 

பிரித்தானியப் பொலிசார் நெடுஞ்சாலை ஒன்றில் வேகமாகப் பயணித்த கார் ஒன்றை நிறுத்தியுள்ளார்கள். இக் காரை ஒரு பெண் ஓட்டிச் சென்றுள்ளார். அவருக்கு பக்கத்தில் மற்றுமொரு பெண் இருந்திருக்கிறார். இவர்கள் இருவரையும் காருக்கு வெளியே அழைத்து வந்து பொலிசார் விசாரித்துக்கொண்டு இருந்த வேளை, அவர்களில் ஒரு பெண் திடீரென படுவேகமாக வந்த லாரி ஒன்றுக்கு முன்னால் சென்று நிற்க்க அது அவர் மீது மோதுகிறது. மோதிய லாரியின் சில்லில் மாட்டிக்கொள்கிறார் அப் பெண். இதனால் அவர் இடுப்புக்கு கீழ் அனைத்து பிசுங்கிப்போகிறது. இருப்பினும் அவர் சில நிமிடம் உயிர்வாழ்கிறார்... இதேவேளை....

பொலிசாருடன் பேசிக்கொண்டு இருந்த மற்றைய பெண்ணும் திடீரெனச் சென்று , வேகமாக வரும் கார் ஒன்றில் அடிபடுகிறார். பொலிசாருக்கு என்ன நடக்கிறது என்று தெரியவில்லை. அந்த நிமிடம் அங்கே என்ன நடக்கிறது என்று அவர்களுக்கு புரியவில்லை. திகைத்துப் போய் நிற்கும் பொலிசார், ஒருவாறு தம்மை சுதாரித்துக்கொண்டு அடிபட்ட இரண்டு பெண்களையும் காப்பாற்ற முயற்சி செய்கிறார்கள். இதேவேளை இரண்டாவதாக(காரில்) அடிபட்ட பெண் சுய நினைவுக்கு வந்து திரும்பவும் , காரில் அல்லது லாரியில் அடிபட்டு சாகவேண்டும் என்று முயற்சி செய்கிறார். நெடுஞ்சாலையின் மறுபக்கம் சென்று தற்கொலை செய்ய முயற்சிக்கிறார். இதனைப் பொலிசார் எவ்வாறு கட்டுப்பாட்டில் கொண்டுவந்தார்கள். பின்னர் என்ன நடந்தது என்பதனை வீடியோவில் பாருங்கள். பொலிசாருக்கு பின்னர் தான் ஒரு தகவல் கிடைத்துள்ளது. தற்கொலைக்கு திரும்பத் திரும்ப முயற்சிசெய்தவர்கள் இருவரும் சகோதரிகள் என்று ! ஏன் இவர்கள் இப்படி செய்தார்கள் என்பது இதுவரை தெளிவாகத் தெரியவில்லை. 



No comments:

Post a Comment