Wednesday, August 14, 2013

தலைவேறு முண்டம் வேறாக யுவதியின் சடலம் மீட்பு !

ஊவாபரணகம - சோல்ட்மார் - தும்புவத்த பிரிவில் கழுத்து வெட்டப்பட்ட நிலையில் பெண் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். 119 அவசர அழைப்பு பிரிவிற்கு கிடைத்த தகவல் ஒன்றை அடுத்து இன்று (14) காலை 7.15 மணியளவில் குறித்த சடலம் மீட்கப்பட்டுள்ளது.

சுமார் 25 வயது மதிக்கத்தக்க யுவதியே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார். வெலிமட நீதவான் மரண விசாரணைகளை மேற்கொண்டுள்ளார் என அதிர்வு இணையம் அறிகிறது. மிகவும் கொடூரமாக தலைவேறாக வெட்டப்பட்ட நிலையில் இவர் உடல் மீட்க்கப்பட்டது அப் பகுதி மக்களை பெரும் அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. குறிப்பிட்ட யுவதி பாலியல் வன்புணர்வுக்கு ஆளாகியிருந்தாரா என்ற கோணத்திலும் , பொலிசார் விசாரணை நடத்திவருகின்றனர் என மேலும் அறியப்படுகிறது.

No comments:

Post a Comment