Tuesday, August 13, 2013

17 வயதுச் சிறுவன் 15 வயது பெண்ணுடன் தேன் நிலவைக் கழித்த குகை !



ஹம்பாந்தோட்டையில் (மகிந்தரின் ஊரில்) உள்ள குலன்கண்ட என்னும் காட்டுப்பிரதேசத்தில் உள்ள குகை ஒன்றில் இருந்து இளம் ஜோடிகளைப் பொலிசார் கைதுசெய்துள்ளார்கள். 17 யதுடைய சிறுவனையும் மற்றும் 15 வயதேயான சிறுமியையும் தாம் அக் குகையில் கண்டுபிடித்ததாக பொலிசார் தெரிவித்துள்ளார்கள். இவர்கள் இருவரும் அக் குகையில் சுமார் 5 நாட்கள் தங்கியிருந்திருக்கிறார்கள். இவர்கள் தங்கள் தேன் நிலவுக்காக அங்கே சென்றதாகவும், அவர்களுக்கு தேவையான உணவுப் பொருட்களை சிறுவனின் தகப்பனார் அவ்வப்போது சென்று கொடுத்து வந்ததாகவும் மேலும் பொலிசார் தெரிவித்துள்ளார்கள். 

தமது ம
ளைக் காணவில்லை எனப் பெற்றோர் கொடுத்த புகாரின் பெயரில், அவர்கள் அச் சிறுமியின் காதலனின் தகப்பனை இரகசியமாகப் பின் தொடர்ந்தவேளை அவர்கள் குகையில் இருப்பதை கண்டுபிடித்துள்ளார்கள். இவர்கள் இருவரும் விளையாட்டுத் திருமண செய்துகொண்டுள்ளதோடு, உண்மையாகவே தேன் நிலவைக் கொண்டாட அக் குகைக்குச் சென்றுள்ளார்கள். இச் செயலுக்கு விளக்குப் பிடித்துள்ளார் அச் சிறுவனின் தந்தை. இச் சம்பவம் ஹம்பாந்தோட்டையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் மகிந்தர் காதுகளுக்கு எட்டியதோ என்னமோ ?

No comments:

Post a Comment