இவர்கள் சுயதொழில் தொடங்க அரசு உதவும் என அறிவித்ததும் மட்டுமல்லாது சுமார் 53 கோடி ரூபாவை அதற்காக இலங்கை அரசு ஒதுக்கியுள்ளது. இதற்கான அனுமதியை இலங்கை அரசின் அமைச்சரவை ஒப்புக்கொண்டுள்ளது என அதிர்வு இணையம் அறிகிறது. சுமார் 4000 முன் நாள் போராளிகளுக்கு, நிதி உதவி வழங்கி அவர்களை சுயதொழில் செய்ய இலங்கை அரசு ஊக்குவிக்கவுள்ளது. இன் நடைமுறையானது கடுகதி வேகத்தில் நடைபெற்று வருகிறது. இன் நிலை நீடிக்குமேயானால், அவர்கள் புலம்பெயர் தமிழர்களை வெறுக்கும் நிலை தோன்றும். புலம்பெயர் நாட்டில் உள்ள தமிழர்கள் நினைத்திருந்தால், அவர்கள் ஆளுக்கு ஒரு முன் நாள் போராளியை தத்தெடுத்து, அவர்களுக்கான உதவிகளைச் செய்து வந்திருக்கலாம். ஆனால் போர்முடிவுற்று 4 ஆண்டுகள் ஆகியும் அதுபோன்ற ஒரு நிலை இதுவரை முழுமையாகத் தோன்றவில்லை.
இதனை தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொண்டு, இலங்கை அரசாங்கமானது முன் நாள் போராளிகளை தம்வசம் இழுக்க இதுபோன்ற திட்டங்களை அறிவித்து வருகிறது. புலம்பெயர் நாட்டில் உள்ள தமிழர்கள், முன் நாள் போராளிகள் தொடர்பாக தமது கவனத்தை திருப்புவது நல்லது. அவர்கள் வாழ்வில் மாற்றங்களை உண்டாக்குவதன் மூலமே நாம் எமது வெற்றி இலக்கை அடைய முடியும். ராம் நகுலன் கே.பி போன்ற , இனத் துரோகிகளுக்கு பணத்தை அனுப்பி முட்டாள் தனமாகச் செயல்படுவதை விடுத்து, முன் நாள் போராளிகள் கெளரவமாக வாழ புலம்பெயர் தமிழ்ச் சமூகம் முதலில் உறுதுணையாக இருக்கவேண்டும். போராட்டம் என்பது, எப்போது எங்கே எப்படி வெடிக்கும் என்பது யாருக்கும் தெரியாது ! அது நாளையும் வெடிக்கலாம், 4 வருடம் கழித்தும் வெடிக்கலாம். இல்லை என்றால் 40 வருடம் கழித்தும் வெடிக்கலாம். ஆனால் எமது சுதந்திர உணர்வுகள் மட்டும் என்றுமே அழியாது !
No comments:
Post a Comment