அதாவது வைரஸை அனுப்ப நினைக்கும் குற்றவாளிகள் ஒரு எஸ்.எம்.எஸ் ஒன்றை அனுப்பினால் போதும். எஸ்.எம்.எஸ் உடன் வைரஸை அனுப்பினால், அது குறிப்பிட்ட சிம் காட் ஊடாகச் சென்று மோபைல் போனைத் தாக்குமாம். இவ்வகையான வைரஸை எப்படி அனுப்புவது என்பது பல குற்றவாளிகளுக்கு தெரியும் என்றும் பலர் கூறுகிறார்கள். இதனால் பலர் பாதிப்படையக்கூடும் எனவும் அச்சம் வெளியிடப்பட்டுள்ளது. உலகில் உள்ள பலரது சிம் காட் இதுபோன்ற பாதுகாப்பு குறைபாடு இருப்பதாகவும், சராசரியாக 8 பேரை எடுத்துக்கொண்டால் அதில் ஒருவராவது இவ்வகையான சிம் காட்டையே பயன்படுத்துகிறார்கள் என்றும் மேலும் தெரிவிக்கப்படுகிறது.
எனவே வித்தியாசமான எஸ்.எம்.எஸ் வந்தால் அதனை திறக்கவேண்டாம் என்றும் , அதில் உள்ள லிங்கை அழுத்தி வேறு இணையத்துக்கு செல்லவேண்டாம் என்றும் ஜேர்மன் ஆய்வாளர் மேலும் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment