ஆபாச நடனம் ஆடியது தொடர்பாக நடிகை மல்லிகா ஷெராவத்திற்கு பிணை அல்லாத பிடியாணை ஒன்றை பிறப்பித்துள்ளது வதோரா மாவட்ட நீதிமன்றம். பாலிவுட்டின் கவர்ச்சி நடிகை மல்லிகா ஷெராவத். தமிழில் சில படங்களில் ஒற்றை பாடலுக்கு ஆடியுள்ளார். ஹாலிவுட்டிலும் நடித்துள்ளார். இந்நிலையில் கடந்த 2006ம் ஆண்டு புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது ஹோட்டல் ஒன்றில் மல்லிகா ஷெராவத் ஆபசமாக நடனமாடியுள்ளார். மல்லிகா ஷெராவத்தின் இந்த ஆபாச நடனத்தை தொலைக்காட்சியில் பார்த்த பரோடாவின் முன்னாள் பார் கவுன்சில் தலைவர் நரேந்திர திவாரி என்பவர் வதோரா மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதுதொடர்பாக மல்லிகாவை நேரில் ஆஜராகும்படி கடந்தவாரம் கோர்ட் சம்மன் அனுப்பியுள்ளது. ஆனால் இதுநாள் வரை மல்லிகா ஆஜராகவில்லை. இந்நிலையில் இன்று அவர் பிணையில் வெளிவர முடியாத அளவுக்கு பிடியாணை பிறப்பித்தது மாவட்ட நீதிமன்றம். மேலும் வருகிற ஆகஸ்ட் 19ம் திகதிக்குள் நேரில் ஆஜராக வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது. இதனையடுத்து மல்லிகா குஜராத் ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்துள்ளார். ஆனால் அவரது மேல்முறையீட்டு மனுவை ஐகோர்ட் நிரகாரித்துவிட்டது. இதனையடுத்து அவர் மாவட்ட நீதிமன்றத்தில் கட்டாயம் ஆஜராக வேண்டிய சூழல் உருவாகி உள்ளது. அப்படி அவர் ஆஜராகவில்லை என்றால் அவர் கைது செய்யப்படும் சூழல் உருவாகும். http://cinema.athirvu.com/fullview.php?id=176 |
Sunday, July 14, 2013
ஆபாச நடனம் ஆடிய மல்லிகா ஷெராவத்துக்கு எதிராக பிடியாணை !
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment