Monday, July 8, 2013

6 பேரை தேடித் தேடி தாக்கும் புலி !

2004ம் ஆண்டு சுணாமி தோன்றிய இடம் எது என்று அனைவருக்கும் தெரியும். இந்தோனேசியத் தீவுகளில் ஒன்றான ஆச்சே ஏனும் தீவு உள்ளது. உலகிலேயே மிகவும் இயற்கை அழகு பொருந்திய தீவுகள் இவையாகும். அங்கு அடர்ந்த காடுகளும் உள்ளது. அங்கே வாழும் புலி இனத்தை சுமத்திரா புலிகள் என்பார்கள். இத் தீவில் 6 வெளிநாட்டவர்கள் மிகவும் அடர்ந்த காடு ஒன்றுக்கு வேட்டையாடச் சென்றுள்ளார்கள். அவர்கள் மான் ஒன்றைப் பிடிக்க பொறிவைத்துள்ளார்கள். ஆனால் அதில் தற்செயலாக புலிக்குட்டி ஒன்று சிக்கிக்கொண்டது. அந்த நேரம் முதல் அவர்கள் 6 பேருக்கும் சனி பகவான் தொற்றிக்கொண்டார். அதுவும் சும்மா சனி அல்ல ஏழரை நாட்டு சனியன் என்பார்களே அது தான் தொற்றிக்கொண்டுள்ளது. பொறியில் சிக்கிய புலிக்குட்டி இறந்துவிட்டது. சற்று நேரத்தில் அங்கே வந்த 2 புலிகள்(தாய் தந்தையாக இருக்கவேண்டும்) அவர்கள் ஆறுபேரையும் துரத்த ஆரம்பித்தது.

உயிரைக் காப்பாற்றிக்கொள்ளாஅறுபேரும் மரண ஓட்டம் ஓடியுள்ளார்கள். புலிகளிடம் ஓட்டம் காட்ட முடியுமா ? அவர்களில் ஒரு நபர் புலியிடம் சிக்கிக்கொண்டார். அவரை இரண்டு புலிகளும் சேர்ந்து இரண்டாகப் பிளந்துள்ளது. இதனைப் பார்த்த 5 நபர்களும் மரத்தில் ஏறிவிட்டார்கள். அவர்கள் அனைவரது முன்னிலையில், தாம் கொன்ற அந்த மனிதனின் அரைவாசி உடலை புலிகள் இரண்டுமாகச் சேர்ந்து சாப்பிட்டுவிட்டது. இதேவேளை சட்டலைட் தொலைபேசியூடாக ஒருவர் நகரத்துக்கு தொடர்புகொண்டு தமது நிலையை பொலிசாருக்கு விளக்கியுள்ளார். ஆனால் பொலிசார் அவ்விடம் வர குறைந்தது 3 நாட்கள் ஆவது செல்லும் என்று கூறிவிட்டார்கள். இதேவேளை மரத்தில் இருக்கும் மிகுதி 5 நபர்களையும் அப்படியே பார்த்துவிட்டு அந்த 2 புலிகளும் அவ்விடத்தில் பேசாமல் இருக்கிறதாம்.

தற்போது கூட அவர்கள் அனைவரும் மரத்தில் தான் இருக்கிறார்கள். அவர்களில் ஒருவர் இருக்கும் மரத்தை நோக்கி ஒரு புலி ஏற ஆரம்பித்துள்ளது. ஆனாலும் மற்றைய புலி அதற்கு இடம்கொடுக்காமல் அதனை தடுத்துவிட்டதாக அவர்கள் பொலிசாருக்கு தெரிவித்துள்ளார்கள். 6 பேரில் ஒருவரைத் தான் தாம் கொல்வோம் என்று புலி சத்தியப் பிரமாணம் எடுத்துள்ளதோ என்னவோ தெரியவில்லை. ஆனால் அவ்விரு புலிகளும் அவ்விடத்தை விட்டுச் செல்லவில்லை. அதனால் அவர்கள் இறங்கவும் முடியவில்லை. அந்தர பவனியில் அவர்கள் இன்றுவரை மரத்தின் மேல் உட்கார்ந்துள்ளார்கள். ஆனால் அவர்களைப் பற்றிய தகவல்கள் மட்டும், உலகளாவிய ரீதியில் எல்லா மீடியாக்களிலும் வெளியாகிக்கொண்டு இருக்கிறது. புலிகள் இரண்டும் சேர்ந்து அவர்களை பயமுறுத்தி வருகிறது என்பது நன்றாகப் புரிகிறது.

ஏன் எனில் புலிகளால் மரம் ஏற முடியாது என்று எவராலும் சொல்லமுடியாது. அது நன்றாகவே மரம் ஏறும். மிகுதியாக உள்ள 5 பேரின் கதையை முடிக்க அதுக்கு அவ்வளவு நேரம் தேவையில்லை....

No comments:

Post a Comment