Monday, June 3, 2013

விமான நிலையச் சோதனையில் அந்தரங்க உறுப்புக்களை அதிகாரிகள் தொட்டதாக ரொறன்ரோ பெண்மணி பரபரப்பு புகார்! (Video)

இது முற்றிலும் வித்தியாசமான செய்தி ஆகும். விமான நிலையத்தில் நடைபெற்ற பாதுகாப்பு சோதனைகளின் போது அதிகாரிகள் தன் அந்தரங்க உறுப்புக்களை தொட்டதாக ஆஷ்லி ஜெசீகா என்ற ரொறொன்ரோ பெண்மணி ஒருவர் பரபரப்பு புகார் தெரிவித்துள்ளார்.
இதற்கு ஆதாரமான காணொளி ஒன்றினையும் அவர் வெளியிட்டுள்ளார்.
ரொறொன்ரோவிற்கு தன் தாயாருடன் ஆஷ்லி ஜெசீகா திரும்பிக் கொண்டிருந்த வேளையில் San Diego சர்வதேச விமான நிலையத்தில் பாதுகாப்பு சோதனைகளை எதிர்கொள்ள நேரிட்டுள்ளது.
அப்போது நடத்தப்படவிருந்த பாதுகாப்பு சோதனைகளில் அதிகாரிகள் மூலம் சோதனைகளை மேற்கொள்ள இருவரும் விருப்பம் தெரிவித்துள்ளனர்.
வழக்கமான பாதுகாப்பு சோதனைகளை இருவரும் படம் பிடித்துள்ளதுடன் பாதுகாப்பு அதிகாரிகளை குற்றம் சுமத்தும் வகையில் காணொளிகளை வெளியிட்டும் உள்ளதாக பலரும் கருத்து தெரிவித்தனர்.
Youtube இல் வெளியான இந்தக் காணொளி மக்களின் கவனத்தை திசை திருப்பும் நோக்குடனே எடுக்கப்பட்டுள்ளதாக சிலரும், பாதுகாப்பு சோதனை என்ற பெயரில் அதிகாரிகள் சில நேரங்களில் வரம்பு மீறுவதாகவும் சிலர் தங்கள் கருத்தைத் தெரிவித்துள்ளனர்.
toronto

No comments:

Post a Comment