Thursday, June 20, 2013

உலகை உலுக்கிய வீடியோ இது!

பெரு நாட்டில் வீதியோரக் கமராவில் பதிவாகிய வீடியோ ஒன்று அனைவரையும் அதிர்சியில் ஆழ்த்தியுள்ளது. மணம் முடித்த ஒருவர் தனது காதலியுடன் பேசிக்கொண்டு இருக்கிறார். அந்த நேரம் பார்த்து அங்கே அவரது மனைவி வந்துவிட்டார். இதனை சற்றும் எதிர்பார்க்காத காதலி தன்னைக் காப்பாற்றுமாறு காதலனின் கைகளைப் பிடிக்க, தனக்கும் அதுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பது போல நைசாக அவ்விடத்தில் இருந்து விலகி ஓடுகிறார் காதலன். ஆனால் அவரது மனைவி விட்டபாடாக இல்லை. தன் கணவனுடன் தொடர்பில் உள்ள அப் பெண்ணின் தலைமுடியை பிடித்து இழுத்துச் செல்கிறார். அவர்கள் பேசிக்கொண்டு நின்ற இடம் ஒரு மலை சார்ந்த பகுதி. அங்கே ஒரு அடிவாரம் இருக்கிறது. அங்கே இருந்து அப் பெண்ணை தள்ளி விடுகிறார்.

சுமார் 20 அடி ஆளமான பள்ளத்தாக்கினுள் அப் பெண் விழுந்துவிடுகிறாள். தனது கணவனின் காதலி சரியாகத் தான் விழுந்து இருக்கிறாளா என்று மீண்டும் ஒரு முறை எட்டிப் பார்த்துவிட்டு மனைவி செல்கிறாள். கொலைசெய்யும் நோக்கத்தோடு மனைவி இவ்வாறு நடந்துகொண்டுள்ளார். அதுபோக இச் சம்பவம் வீடியோவில் பதிவாகியது பெரியவிடையம். பொலிசார் துப்புத் துலக்க ஏதுவாக அமைந்துள்ளது. 20 அடி பள்ளத்தில் விழுந்த அப் பெண் சில நிமிடங்கள் கழித்து எழுந்துள்ளார். அவர் இறக்கவில்லை என்று கூறப்படுகிறது. இருப்பினும் கடுமையான காயங்களுக்கும் எலும்பு முறிவுக்கும் அவர் உள்ளாகியுள்ளார் என்று மேலும் அறியப்படுகிறது.



No comments:

Post a Comment