"எதிர்நீச்சல்" படத்தில் இணைந்து நடித்த ப்ரியா ஆனந்துக்கும், சிவகார்த்திகேயனுக்கு ஏதோ ஊடல் போலும். "எதிர்நீச்சல்" படத்தின் சக்ஸஸ் மீட் வடபழனி பசுமை பூங்கா ஹோட்டலில் நடந்தபோது ப்ரியா ஆனந்த் மீடியாக்களுக்கு வெளியே பைட்ஸ் கொடுத்தால், சிவகார்த்திகேயன் உள்ளே இருந்தார், அவர் உள்ளே இருந்தால் இவர் வெளியே வந்து பேட்டி கொடுத்தார். ஆனால் "எதிர்நீச்சல்" படத்தின் மற்றொரு நாயகி நந்திதாவோ சிவகார்த்தியுடன் ஒட்டி உரசியபடி இருந்தார். எல்லோரும் மேடையில் வீற்றிருந்தபோதும் இதை கதை!
சிவகார்த்திகேயன் பக்கத்தில் நந்திதா, அடுத்து ப்ரியா ஆனந்த், அவருக்கு அருகில் அனிரூத் என வீற்றிருந்தனர். இதை கவனித்த விவரமான நிருபர் ஒருவர், ப்ரியா ஆனந்தை பார்த்து நீங்கள் சிவகார்த்திகேயனை விட்டு விலகி விலகி போவதேன்? என கேள்வியாகவே கேட்டு விட, உடனடியாக ப்ரியா, எங்களுக்குள் அப்படியெல்லாம் எதுவுமில்லை, எனக்கூறிவிட்டு, இதுதான் சாக்கென்று எழுந்து நந்திதாவை அனிருத் பக்கம் அமர வைத்துவிட்டு, சிவகார்த்தி பக்கம் பச்சக் என்று ஒட்டிக்கொண்டார். உடனே சிவகார்த்திகேயன் இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா.. என்று அந்த நிருபரை பார்த்து சிரித்தபடி கேட்டார்.
ஆமாம், அப்படி என்ன ஊடல்.? அதன்பின் இப்படி கூடல்..?! அவர்களுக்கே வெளிச்சம்!! |
No comments:
Post a Comment