Sunday, May 5, 2013

நண்பர்களுடன் கட்டாய உடலுறவு கொண்ட நாடாளுமன்ற துணை சபாநாயகர் கைது!

பிரிட்டன் நாட்டின் நாடாளுமன்ற பொது சபையின் துணை சபாநாயகராக பதவி வகிக்கும் நிகெல் இவான்ஸ்(55) என்பவர் ஓரினச் சேர்க்கையாளர் ஆவார்.
நிகெல் இவான்ஸ் தங்களை கட்டாயப்படுத்தி உடலுறவு வைத்துக் கொண்டதாக சுமார் 20 வயது மதிக்கத்தக்க ஆண் நண்பர்கள் இருவர் இவர் மீது பொலிசில் புகார் கொடுத்துள்ளனர்.
இதனையடுத்து, லண்டனிலுள்ள உள்ள நாடாளுமன்ற பொது சபைக்கு சென்ற பொலிசார், நிகெல் இவான்ஸை கைது செய்தனர்.
பிரெஸ்டென் பொலிஸ் நிலையத்திற்கு அவரை அழைத்துச் சென்று வழக்குப்பதிவு செய்தனர். பின்னர் வருகின்ற யூன் 19ம் திகதி வரை செல்லுபடியாகத் தக்க 45 நாள் பிணையில் அவரை விடுவித்தனர்.
தன் மீது கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டு முற்றிலும் பொய்யானது, ஆதாரமற்றது என்று நிகெல் இவான்ஸ் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment