Friday, May 24, 2013

இந்தியாவில் மனைவியுடன் கள்ளத்தொடர்பு வைத்த அண்ணனை அடித்து கொன்ற தம்பி!


மன்னார்குடி அருகே தம்பி மனைவியுடன் கள்ளத் தொடர்பு காரணமாக விவசாயி அடித்துக்கொலை செய்யப்பட்டார்.


மன்னார்குடி, எடை மேலையூர் அருகே உள்ள வடக்கு கண்டியன்தெரு காலனியை சேர்ந்தவர் சேவையன் (60), விவசாயி. இவரது தம்பி அழகிரி (48). சென்னையில் உள்ள தனியார் ஓட்டலில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி தவமணி (40). இவர்களுக்கு 2 மகன்கள், 1 மகள் உள்ளனர்.

விவசாயி சேவையனின் முதல் மனைவி கடந்த 25 வருடங்களுக்கு முன்பு வீட்டைவிட்டு ஓடி விட்டார். இதையடுத்து அவர் அதே பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணை 2-வதாக திருமணம் செய்துகொண்டார். இந்த நிலையில் 2-வது மனைவியும் நோய்வாய்ப்பட்டு திடீரென இறந்து விடவே சேவையன் மனவிரக்தியில் காணப்பட்டார். இதனால் பக்கத்து வீட்டில் வசித்துவந்த தம்பியின் மனைவி தவமணி அவருக்கு ஆறுதல் கூறி வந்தார். இருவரும் வெளியிடங்களுக்கு ஒன்றாக சென்று வந்தனர்.

மேலும் அழகிரி சென்னைக்கு அடிக்கடி சென்று விடுவதால் தவமணிக்கும் சேவையனுக்கும் கள்ளத்தொடர்பு இருந்ததாக அக்கம் பக்கத்தில் வசிக்கும் பொதுமக்கள் கூறுகின்றனர். இதனால் அழகிரிக்கு சந்தேகம் ஏற்ப்பட்டது. இதை தொடர்ந்து சென்னையில் இருந்து திடீரென ஊருக்கு திரும்பி வந்த அழகிரி சேவையனுடன் தகராறில் ஈடுபட்டார். இதேபோல் நேற்று நள்ளிரவு மீண்டும் தகராறு ஏற்பட்டது.

அப்போது ஆத்திரம் அடைந்த அழகிரி எனது மனைவியுடன் நீ தனிமையில் உல்லாசமாக இருக்கீறாயா? என்று கூறி வீட்டின் அருகே கிடந்த உருட்டுக்கட்டையை எடுத்து சேவையனின் தலையில் ஓங்கி அடித்ததாக கூறப்படுகிறது. இதில் மயங்கி விழுந்த அவர் சம்பவ இடத்திலேயே ரத்தவெள்ளத்தில் துடிதுடித்து பரிதாபமாக இறந்தார். அண்ணன் இறந்து விட்டதை அறிந்த அழகிரி அங்கிருந்து தலைமறைவாகி விட்டார்.

தகவல் அறிந்த வடுவூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மன்னார்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான அழகிரியை தேடிவருகிறார்கள். கள்ளத்தொடர்பு காரணமாக தம்பி அண்ணணை அடித்துக் கொன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
http://saanthai.blogspot.nl/2013/05/blog-post_3364.html?utm_source=dlvr.it&utm_medium=facebook

No comments:

Post a Comment