Saturday, May 11, 2013

யாழில் கோஷ்டி மோதலில் ஐவர் காயம் - ஆறு பேர் கைது!


யாழ். மானிப்பாய் சுதுமலை பகுதியில் இடம்பெற்ற கோஷ்டி மோதல் சம்பவமொன்றில் ஐந்து பேர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
குறித்த பகுதியில் உள்ள கோவிலில் பாட்டுக் கச்சேரியொன்று நடைபெற்றுள்ளது.
இதன் போது கச்சேரிக்கு மதுபோதையில் சென்ற இளைஞர்கள் சிலரே மோதலில் ஈடுபட்டுள்ளனர் என்று பொலிஸ் விசாரணைகளிலிருந்து தெரிய வந்துள்ளது.
இச்சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் பொலிஸாரால் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மோதலில் படுகாயம் அடைந்த ஐவரும் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இது குறித்த மேலதிக விசாரணைகளை மானிப்பாய் பொலிஸார்  நடத்தி வருகின்றனர்.

No comments:

Post a Comment