நியூசிலாந்து நாட்டில், இளம் பெண்களை கடத்தி சென்று பாலியல் பலாத்காரம் செய்த, இந்திய வம்சாவளி இளைஞர்கள் இருவருக்கு, 17 ஆண்டு சிறை தண்டனை அளிக்கப்பட்டுள்ளது.
நியூசிலாந்து நாட்டின் ஹேமில்டன் நகரில் வசிப்பவர்கள், பெஞ்சமின் நிலேஷ் கவுன்டர்,24, ரோகித் பிரசாத்,27. கடந்த, 2011ம் ஆண்டு, டிசம்பரில், 15 மற்றும் 17 வயது பெண்களை கடத்தி சென்றனர். இவர்களில், 17 வயது பெண் தப்பி ஓடிவிட்டார். இவர்களிடம் சிக்கிய, 15 வயது பெண்ணை, ஐந்து மணி நேரம் பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். இந்த குற்றத்துக்காக கைது செய்யப்பட்ட இருவருக்கும், 17 ஆண்டு சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது
No comments:
Post a Comment