Thursday, May 23, 2013

மருமகளை கெடுத்த தாய் மாமனுக்கு 12 வருட சிறை!

உறவுக்கார 16 வயதுச் சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்தார் என்கிற வழக்கில் நபர் ஒருவருக்கு 12 வருட கடூழிய சிறைத் தண்டனையும் 25000 ரூபாய் அபராதமும் மொனராகலை மாகாண மேல் நீதிமன்றத்தால் விதிக்கப்பட்டு உள்ளது.

சகோதரியின் மகளையே துஷ்பிரயோகம் செய்து இருக்கின்றார். பாதிக்கப்பட்ட சிறுமிக்கு 100000 ரூபாய் நஷ்டஈடு வழங்க வேண்டும் என்றும் நீதிமன்றத்தால் உத்தரவிடப்பட்டு உள்ளது.
அபராதத்தை செலுத்த தவறுகின்ற பட்சத்தில் தண்டனைக் காலம் 04 வருடங்களால் அதிகரிக்கப்படும் என்று எச்சரிக்கப்பட்டும் உள்ளது.
2003 ஆம் ஆண்டு ஓகஸ்ட் 26 ஆம் திகதி இவ்வழக்கை சட்டமா அதிபர் தாக்கல் செய்து இருந்தார்.

No comments:

Post a Comment