Sunday, April 14, 2013

புதிதாக மலர்ந்துள்ள விஜய வருட நல்வாழ்த்துக்கள்!


நாட்டின் பல்வேறு பகுதிகளில் இடம்பெறும் புத்தாண்டு நிகழ்வுகள்
[ ஞாயிற்றுக்கிழமை, 14 ஏப்ரல் 2013, 06:51.59 AM GMT ]
இலங்கையின் பல பாகங்களிலும் சித்திரைப் புத்தாண்டை மக்கள் அமைதியுடன் கொண்டாடி வருகின்றனர்.
சித்திரைப் புத்தாண்டையொட்டி மட்டக்களப்பு மற்றும் யாழ் மாவட்டத்தில்  பல்வேறு பகுதிகளிலும் ஆலங்களில் விசேட பூஜைகளும் நிகழ்வுகளும் இடம்பெற்று வருகின்றன. அத்துடன் இம்முறை புத்தாண்டு மிகவும் எழுச்சிகரமாகவும் கோலகலமாகவும் கொண்டாடப்பட்டுவருவதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.
மட்டக்களப்பு பெரியகல்லாறு ஸ்ரீசிவசுப்ரமணியர் ஆலயத்தில் சித்திரைப் புத்தாண்டு விசேட திரு விழா நேற்று நள்ளிரவு இடம்பெற்றது.
விசேட யாக பூசை செய்யப்பட்டு, மூலமூர்த்திக்கு அபிசேகம் செய்யப்பட்டது.அதனைத்தொடர்ந்து வசந்த மண்டபத்தில் அலங்கரிக்கப்பட்ட முருகப்பெருமானுக்கு விசேட பூசைகள் நடத்தப்பட்டது.
நாதஸ்வர, மேளம் நாதம் முழங்க சுவாமி உள் வீதி வலம் வந்து அடியார்களுக்கு ஆசி வழங்கினார்.
பெரியகல்லாறு ஸ்ரீசிவசுப்ரமணியர் ஆலயத்தின் பிரதம குரு சிவஸ்ரீ தேவமனோகர குருக்கள் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் பெருமளவான அடியார்கள் கலந்துகொண்டனர்.
இதேபோன்று மட்டக்களப்பு ஓந்தாச்சிமடத்தில் சித்திரைப்புத்தாண்டு சிறப்பு நிகழ்வுகள் இடம்பெற்று வருகின்றன.
அரசாங்கத்தின் பிரதான நிகழ்வாக இது இடம்பெற்றுவருகின்றது.இதன்போது பல்வேறு கலை நிகழ்வுகளும் விளையாட்டு நிகழ்வுகளும் இடம்பெற்று வருகின்றன.
இதேவேளை மலையகத்திலும் மக்கள் வெகு விமர்சையாக தமிழ்ப் புத்தாண்டைக் கொண்டாடி வருகின்றனர்.

புதிதாக மலர்ந்துள்ள விஜய வருட நல்வாழ்த்துக்கள்!

இன்று புதிதாக மலர்ந்துள்ள விஜய வருடத்தில் வாசகப் பெருமக்களுக்கு இதயம் கனிந்த புதுவருட நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்வதில் மகிழ்வடைகின்றோம்.
மலர்ந்துள்ள இந்த விஜய மங்கள வருடம் தங்களுக்கு அனைத்து நலன்களையும் வழங்கி சிறப்பாக வாழ  வேண்டுமென வாழ்த்துவதுடன், இறைவன் திருவருள் அனைவருக்கும் கிடைக்க வேண்டுமென்றும்  பிரார்த்தித்து வேண்டுகின்றோம்.

No comments:

Post a Comment