Tuesday, March 5, 2013

கணவர், காதலனுடன் ஒரே வீட்டில் குடும்பம் நடத்தும் பிரித்தானியா பெண்!!

இதில் பெருமை வேறு,மிருகங்களும் இவர்கள் போலத்தான் வாழ்கின்றன!!அவை ஐந்து அறிவு கொண்டவையாம்!! அங்கிருந்து பலகோடி ஆண்டுகள் பாடுபட்டு மனிதனாகினோம்!!ஆனால் நினைத்தவுடன் மிருகமாகிறோம்! நாளை பெற்ற பிள்ளைகளுடன் குடும்பம் நடாத்திக்கொண்டு அதுவே சிறந்தது என்றும் பேட்டி கொடுப்பார்,இவர்களும் ஆதரித்து செய்தி போடுவார்!!(மிருகங்கள் அப்படித்தான் இன்றும் செய்கின்றன,காரணம் அவை ஐந்தறிவு ஜீவராசிகள்!!)

கணவர், காதலனுடன் ஒரே வீட்டில் குடும்பம் நடத்தும் பிரித்தானியா பெண்
[ செவ்வாய்க்கிழமை, 05 மார்ச் 2013, 08:10.30 மு.ப GMT ]
பிரித்தானியாவைச் சேர்ந்த ஒரு பெண், கணவர், காதலர் மற்றும் இரண்டு குழந்தைகளுடன் ஒரே வீட்டில் வசித்து புதுமையான வாழ்க்கையை அறிமுகப்படுத்தியுள்ளார்.
லண்டனில் தனியார் நிறுவனமொன்றில் மக்கள் தொடர்பு அதிகாரியாக பணியாற்றும் மரியா பட்ஸ்கி(வயது 33) என்ற பெண்ணுக்கும் பால்(வயது 37) என்பவருக்கும் முறைப்படி திருமணமாகி 9, 7 வயதுகளில் குழந்தைகள் உள்ளன. தற்செயலாக மரியாவை சந்திக்க வந்த பீற்றர்(வயது 33) என்பவருக்கும் மரியாவுக்கும் காதல் ஏற்பட்டுவிட்டது.
கணவர் மற்றும் குழந்தைகளை தவிக்கவிட்டு காதலருடன் ஓராண்டு வாழ்க்கை நடத்திய மரியா, இப்போது ஒரே வீட்டில் கணவர், காதலர், குழந்தைகளுடன் வாழ்கிறார்.
இது பற்றி அவர் கூறியதாவது: கணவர் பாலுக்கும் எனக்கும் நல்ல புரிதல் இருந்து வந்த நிலையில் என் மனதில் திடீரென பீற்றர் நுழைந்து விட்டார். இருவரையும் மறக்க முடியாமல் தவித்த நான், ஒரு கட்டத்தில் பீற்றருடன் சென்றுவிட்டேன். ஓராண்டு வரை, அவர் வீட்டில் நாங்கள் வசித்தோம். தினமும் எனக்கு, என் கணவர் பால் மற்றும் குழந்தைகள் நினைவு வந்தது.
குழந்தைகளும் என்னை காணாமல் அழுததால் கணவர் மற்றும் குழந்தைகளை சந்திக்க அவ்வப்போது வந்து சென்றேன். இப்படியே அங்கும் இங்குமாக ஓராண்டு நகர்ந்தது. இதன் பின்னர், மூன்று பேரும் ஒரு நாள் ஒன்றாக உட்கார்ந்து பேசினோம்.
முதல் சந்திப்பிலேயே பீற்றரும், பாலும் நல்ல நண்பர்களாகிவிட்டனர். இது எனக்கு ரொம்ப வசதியாக போய்விட்டது. மூவரும் ஒரே வீட்டில் ஏன் வசிக்க கூடாது என விவாதித்தோம். அதற்கு என்னென்ன செய்ய வேண்டும்; என்னென்ன செய்யக்கூடாது என பேசி முடிவு செய்தோம். அதை, குழந்தைகளும் ஏற்றுக்கொண்டன.
ஓராண்டாக கணவர் பால், காதலர் பீற்றர் குழந்தைகளுடன் நான் ஒரே வீட்டில் உள்ளேன்; எங்களுக்குள் எந்த பிரச்னையும் இதுவரை இல்லை. படுக்கையை மூவரும் ஒன்றாக பகிர்ந்து கொள்வதில்லை. பீற்றர் இருக்கும் போது, பால் வருவதில்லை; பால் இருக்கும் போது பீற்றர் வருவதில்லை.
பிறருக்கு வினோதமாக தெரியும் எங்கள் வாழ்க்கை, எங்களுக்குள் நல்ல சுமூகத்தையும், புரிதலையும் கொடுத்துள்ளது.
பால், பீற்றர் இருவரும், என் குழந்தைகளை கண் போல பார்த்து கொள்கின்றனர். என்னையும், அவர்கள் இருவரும் தரையில் விடுவதில்லை. இது போன்ற அதிர்ஷ்டம் வேறு எந்த பெண்ணுக்கும் வாய்க்காது என மரியா கூறியுள்ளார்.

No comments:

Post a Comment