Tuesday, March 5, 2013

டெல்லியில் சிறுமி பலாத்காரம்: 5 பேர் பதவி இடைநீக்கம் !

புதுடெல்லியில் 7 வயது பள்ளி மாணவி மீதான பாலியல் வன்முறைக்கு பள்ளியின் இன்ஸ்பெக்டர், முதல்வர் மற்றும் பள்ளி ஆசிரியர் உள்ளிட்ட ஐந்து பேர் அதிரடியாக பதவி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
மங்கல்புரி முனிசிபல் அரச பள்ளியில் கல்வி பயின்று வந்த இரண்டாம் வகுப்பு மாணவி தனது பகல் வேளை உணவை பெறச்சென்ற போது பள்ளி வளாகத்தில் வைத்து பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டார்.
அவரது பெற்றோர் மூலம் இவ்விடயம் வெளியுலகுக்கு தெரியவந்தது. தற்போது அவர் சஞ்சேய் காந்தி மெமோரியல் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளார். இச்சம்பவம் தொடர்பில் 200க்கு மேற்பட்டோர் விசாரிக்கப்பட்டு வருகின்றனர்.
இரண்டு ஆசிரியர்கள் மற்றும் பள்ளி பாதுகாவலர் என மூவர் இச்செயலில் தொடர்பு பட்டிருக்கலாம் எனும் சந்தேகத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
இச்சம்பவத்தை அடுத்து நேற்று பள்ளி வளாகத்தில் ஆர்ப்பாட்டம் மற்றும் வன்முறைகள் இடம்பெற்றிருந்ததும் குறிப்பிடத்தக்கது.

http://india.lankasri.com/view.php?20AOl3dbcA40634e3UMQ2022YmD2ddcfDmI20eMWAKae4W04A4cb2lOm22

No comments:

Post a Comment