அமரர் மகாலிங்கம் நாகநாதர்
தோற்றம் : 3 ஏப்ரல் 1953 — மறைவு : 29 மார்ச் 2012
தோற்றம் : 3 ஏப்ரல் 1953 — மறைவு : 29 மார்ச் 2012
திதி : 18 மார்ச் 2013 | ||||||||||||||||||||
யாழ். அல்வாய் தெற்கு தாமன் தோட்டத்தைப் பிறப்பிடமாகவும், நெதர்லாந்து Den helder ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த மகாலிங்கம் நாகநாதர் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஆண்டு ஒன்றும் ஆனதுவோ எமை அழவிட்டு நீர்சென்று
அன்புத்தெய்வமே ஆறாத்துயரில் துடிக்கின்றோமே...நீண்டுசெல்லும் நாட்களிலே நிழல்வடிவில் தெரிகிறீர்கள் நித்திரையில்கூட எம்கண்களிலே நீர்தானே ஆண்டு பல சென்றாலும் அகலாது எமக்குள்ளே வாழ்வீர்கள்...
அனுதினமும் தொழுகின்ற எம் குடும்பத் தெய்வமானவரே
மாண்டவர்களோடு நீங்கள் விண்ணுலகில் வாழ்ந்தாலும் மனதாலும் நினைவாலும் நிதம்நிதம் துதிக்கின்றோம்...ஆண்டவனின் அருளாலே அன்புத்தெய்வமே நீங்கள் நித்திய ஆன்மசாந்தி பெறவேண்டுமென்று மலா்தூவி வணங்குகின்றோம்...!
ஓம் சாந்தி...! ஓம் சாந்தி...! ஓம் சாந்தி...!!!
அன்னாரின் ஆத்ம சாந்தி பிரார்த்தனையைத் தொடர்ந்து இடம்பெறும் மதியபோசனம் 23-03-2013 சனிக்கிழமை அன்று பி.ப 12:00 மணிமுதல் 4:00 மணிவரை Drooghe Bol 1006, 1788 VA Julianadorp, Nederland என்னும் முகவரியில் இடம்பெற உள்ளது.எம் குடும்பத்தினருக்கு ஆறுதல் அளித்த அனைவரையும் மதியபோசன உபசாரத்தில் கலந்து கொண்டு எமக்கு மேலும் ஆறுதல் அளிக்க வேண்டுகிறோம். உம் நீங்கா நினைவுகளுடன் பிரார்த்திக்கும் மனைவி(வதனேஸ்வரி) பிள்ளைகள் (கிருஸ்ணகுமார், கிருஸ்ணலீலா, கிருஸ்ணவேணி, கிருஸ்ணரூபன்) மருமக்கள் (விக்னேஸ்வரன், குமரன், தாட்ஷாயினி) பேரப்பிள்ளைகள் (லக்மன், டைஜன்) அன்புச்சகோதரா்கள் உற்றார் உறவினர் நண்பர்கள் | ||||||||||||||||||||
தகவல் | ||||||||||||||||||||
குடும்பத்தினர்
|
No comments:
Post a Comment