Sunday, February 17, 2013

இலங்கையின் மாத்தறையில் விண்ணில் இருந்து விழுந்த அடையாளம் தெரியாத பொருட்கள்!


இலங்கை மாத்தறை மாவட்டம், அக்குரஸ்ஸ பகுதியில் நேற்று முன்தினம் .இரவு முதல் அடையாளம் தெரியாத பைபர் போன்ற பொருட்கள் வானில் இருந்து வீழ்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில் குறித்த பொருட்கள், 2012 டிஏ14  வால் நட்சத்திரம் பூமிக்கு அருகில் நேற்று பயணித்தமையால் ஏற்பட்ட நிகழ்வாக இருக்கலாம் என்று ஆர்தர் சி கிளார்க் நிலையத்தின் ஆய்வாளர் சந்தன ஜெயரட்ன தெரிவித்துள்ளார்.
ரஸ்யாவிலும் நேற்று முன்தினம் வீழ்ந்த விண்கற்களை போன்றதாக இது இருக்கலாம் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
எனினும் அக்குரஸ்ஸையில் வீழ்ந்த பொருட்களின் மாதிரிகள் ஆய்வுக்கு உட்படுத்தப்படவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்

No comments:

Post a Comment