Thursday, January 24, 2013

நாக பாம்புடன் நடனமாடிய பெண் : இவரை வெட்டியது யார் என்று தெரியவில்லை !




நாகப் பாம்பை வைத்து இலங்கை மற்றும் உலகம் முழுக்க ஊடகங்களில் பிரபலமடைந்த நிரோசா விமலரத்ன என்ற பெண் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்று அதிர்வு இணையம் அறிகிறது. இரவு நேர களியாட்ட விடுதியில் நடனமாடும் குறித்த பெண் வெல்லம்பிட்டிய பகுதியில் வெட்டுக்காயங்களுடன் நேற்று (23) அதிகாலை மீட்கப்பட்டுள்ளார். பின்னர் பொலிஸார் அப்பெண்ணை கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.
இரவு நேர களியாட்ட விடுதியில் நாக பாம்புடன் நடனமாடிய குறித்த பெண் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டு பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டார் என்ற செய்திகள் ஏற்கனவே வெளியாகியிருந்தது.

அவரிடம் இருந்த நாக பாம்பை பறித்த பொலிஸார் அதனை தெஹிவளை சரணாலயத்தில் ஒப்படைத்தனர். பின்னர் நீதிமன்றில் மனு தாக்கல் செய்து நீதிமன்ற உத்தரவில் தனது நாக பாம்பை மீளப் பெற்றுக் கொண்ட பெண் ஊடகங்களில் பிரசித்தமானார். எனினும் இப்பெண் ஊடகங்களுக்கு வழங்கிய தகவல்கள் அனைத்தும் பொய் என, பெண்ணை நன்கு அறிந்த பொது மக்கள் தெரிவித்தனர். தற்போது அவர் வெட்டுக் காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்ற செய்தியும் ஊடகங்களில் முக்கிய இடத்தைப் பிடித்துள்ளது.

No comments:

Post a Comment