Wednesday, December 5, 2012

கற்சிலை கண்ணீர் வடித்த அதிசயம்: அதிர்ச்சியில் மக்கள் !!



லிந்துலை மட்டுகெல தோட்டத்திலுள்ள கற்சிலையிலிருந்து திடீரென கண்ணீர் வடிந்த அதிசய சம்பவமொன்று நேற்று இடம்பெற்றுள்ளதால்  பிரதேசவாசிகள் அதிர்ச்சியுற்றுள்ளதாக  இலங்கைச் செய்திகள் தெரிவிக்கின்றன.

இதுகுறித்து மேலும் தெரியவருவதாவது,
லிந்துலை சென்கூம்ஸ் தோட்டத்துக்குச் செல்லும் பிரதான பாதையில் மட்டுகெல 7 ஆம் இலக்க கொலனியிலுள்ள மாரியம்மன் சிலையையொத்த கற்சிலையிலிருந்தே இந்த அதிசய சம்பவம் இடம் பெற்றுள்ளது.
மட்டுகெல தோட்ட மக்கள் கடந்த 1960 ஆம் ஆண்டிலிருந்து திருவிழாக்காலங்களில் கரகம் பாலித்தலுக்காகப் பயன்படுத்துகின்ற இடத்தில் வைக்கப்பட்டுள்ள இந்த கற்சிலைக்கு நேற்று நண்பகல் வேளையில் ஒருவர் விளக்கேற்றுவதற்கு சென்றபோது கற்சிலையிலிருந்து நீர் வடிந்தோடுவதை அவதானித்துள்ளார்.
இதனையடுத்து இவ்விடயம் தொடர்பாக கேள்வியுற்ற தோட்ட மக்கள் வழிபாடுகளில் ஈடுபட்டு வருகின்றமையை அடுத்து, ஏன் இவ்வாறு ஏற்பட்டுள்ளது என மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர் எனவும் செய்திகள் தெரிவிக்கின்றன.
http://www.eelamboys.net/archives/9350

No comments:

Post a Comment