Wednesday, December 12, 2012

இலங்கையின் பல பாகங்களிலும் பறக்கும் ஒளிக் கற்கள்! புவியீர்ப்பின் காரணமாக பூமியில் விழலாம்! மக்கள் அச்சம் !


நாட்டின் பல பாகங்களிலும் இரவு வேளைகளில் தென்பட்ட பறக்கும் ஒளிக்கற்கள் அனேகமாக ஒரு கோளாக இருக்கலாம் என விமானப்படைப் பேச்சாளர் விங்கொமாண்டர் சிராஜ் ஜலால்தீன் தெரிவித்துள்ளார்.
கம்பஹா, சிலாபம், அநுராதபுரம் உள்ளிட்ட பல இடங்களிலும் பறக்கும் ஒளிக்கற்களை தெளிவாக அவதானிக்கக் கூடியதாக இருந்துள்ளது.
இதனால் கடந்த சில நாட்களாக அப்பகுதி மக்களிடையே அச்சம் நிலவுவதாக தெரிவிக்கப்படுகிறது.
இது தொடர்பில் விமானப்படைப் பேச்சாளர் விங்கொமாண்டர் சிராஜ் ஜலால்தீன் கூறுகையில், குறித்த ஒளிப்பிழம்பினை கண்காணிக்கும் முகமாக 24 மணிநேர சேவையில் விமானப்படையினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
தற்போது வான்பரப்பு மழுவதுமாக அவதானிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. இதற்காக விசேட திட்டமொன்று செயற்படுத்தப்பட்டுள்ளது.
ஆனால் இதுவரையில் ஒளிப்பிழப்பினை விமானப்படையினரால் காணமுடியவில்லை. ஏனெனில் ஓளியாக மட்டும் தென்படுவதால் அது விமானப்படையின் ராடர் கருவிகளில் பதிவாகும் வாய்ப்புக்கள் குறைவு.
மேலும் கொழும்பு பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த விசேட குழுவொன்றும் இது தொடர்பில் அவதானிக்கின்றது.
குறித்த ஒளிப்பிழம்பு ஒரு கோளாக இருக்கலாம் எனவும் அக்குழு குறிப்பிட்டுள்ளது. எனவே மக்கள் வீணாக அச்சம் கொள்ளவேண்டிய அவசியம் இல்லை என்றார்.
இதேவேளை வியாழன் கோளுக்கு அண்மையில் புதிய கோளொன்று வெடித்துச் சிதறியதில் பறக்கும் கற்கள் எனப்படும் அஸ்டரொய்ட்டுக்கள் அண்டவெளியில் சுற்றுவதாக நாசா தெரிவித்திருந்தது.
இந்த பறக்கும் கற்கள் புவியீர்ப்பின் காரணமாக பூமியில் விழலாம். ஆனால் அவை எவ்வித ஆபத்தினையும் விளைவிக்காது என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
http://news.lankasri.com/show-RUmqzCSWNUepz.html

டிசெம்பர் 21ல் உலகம் அழியாது!- ஆர்தர் சி. கிளார்க் நிலையம்

டிசெம்பர் 21ம் திகதியில் உலகம் அழிந்துவிடும் என்று மக்கள் மத்தியில் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ள செய்தியை ஆர்தர் சி. கிளார்க் நிலையம் நிராகரித்துள்ளது.
அமெரிக்காவின் நாஸாவும் உலக அழிவு எதிர்வுகூறலை மறுத்துள்ளது டிசெம்பர் 21ஆம் திகதி, உலகம் இருளில் மூடிவிடும் என கூறப்படுவது அர்த்தமற்றது என மேற்படி நிலையத்தின் பேச்சாளர் தெரிவித்தார்.
இதேவேளை, அடிப்படைவாத கிறிஸ்தவ திருச்சபையொன்று டிசெம்பர் 21இல் உலக அழிவுபற்றிய இறுவட்டொன்றை வழங்கியதாக தகவல் கிடைத்துள்ளது.
சூரியனிலிருந்து சில சமயம் தீப்பிளம்புகள் மற்றும் சூரிய புயல் என்பன ஏற்படுவதுண்டு. இவற்றை இரண்டு அல்லது மூன்று நாட்களுக்கு முன்னரே அறிந்துகொள்ள முடியும் என ஆர்தர் சி. கிளார்க் நிலைய பேச்சாளர் குறிப்பிட்டார்.
இந்த உலகம் 2012இல் அழிய மாட்டாது. எமது கிரகம் 4 பில்லியன் வருடங்களுக்கும் மேலாக இருந்து வருகிறது. இவ்வாறான அச்சுறுத்தல்கள் இருப்பதாக உண்மையான விஞ்ஞானிகள் எவரும் கூறவில்லை என நாஸா கூறியுள்ளது.
குப்ரகங்கள் சில சமயம் பூமிக்கு அருகில் வருவதுண்டு. அவ்வாறு நடந்தாலும் பூமி மீது எந்தவித தாக்கமும் ஏற்படாது என நாஸா குறிப்பிட்டுள்ளது.
2012 – 2014 இடைப்பட்ட காலப்பகுதியில் சூரியனிலிருந்து தீப்பிளம்புகள் உண்டாக வாய்ப்புண்டு. இவற்றாலும் பூமி பாதிக்கப்பட மாட்டாது. சூரிய தீப்பிளம்புகள் சிலவேளை செய்மதி தொடர்பாடல்களைக் குழப்பலாம் என நாஸா கூறியுள்ளது.
இலங்கை வானில் பறக்கும் தட்டு காணப்பட்டதால் விமானப்படையை எச்சரிக்கையாக இருக்கும்படி ஆர்தர் சி. கிளார்க் நிலையம் கூறியதாக வெளியான செய்திகளையும் இந்நிலையம் மறுத்தமை குறிப்பிடத்தக்கது.
http://news.lankasri.com/show-RUmqzCSWNUeoz.html

No comments:

Post a Comment