Wednesday, December 12, 2012

12-21-12 உலகம் அழியப்போவது இல்லை இது உறுதி - விடியோ இணைப்பு!!!

சில ஊடகங்கள் அண்மையில் அவுஸ்திரேலிய பிரதமரே செல்லிவிட்டார் என்றெல்லாம் செய்திகளை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இவை எல்லாமே ஒரு விளம்பரமாகவே இவர்கள் பயன் படுத்துகின்றார்கள். இவற்றை எல்லாம் செய்தியாக வெளியிட்டு ஒரு பரபரப்பை ஏற்படுத்தும் ஊடகங்கள் அதிகரித்து விட்டது, தமிழிலும் அதிகரித்து விட்டது பரிஸ்தமிழ்.கொம் வாசகர்களே நாம் உறுதியாகச் சொல்கின்றோம் உலகம் அழியப் போவது இல்லை என்பதை.  இவர்களின் கணிப்பின் 12-21-12 இல் அழியும் என்கின்றார்கள் பரிஸ்தமிழ்.கொம் வாசகர்களே இந்த கட்டுரையை வாசித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள். அழியும் எனும் முட்டாள்கள் அனைவரும் அழிந்து விடுவார்கள். நீங்கள் மீண்டும் 12-22-12 எமது இந்த கட்டுரையை கருத்தி இடுங்கள் இந்த முட்டாள்களின் கணிப்பின் படி அழிவில் இருந்து தப்பிய அதிஸ்ட சாலிகளாக நாங்கள் இருப்போம்.
இதை வாசித்தவர்கள் கட்டாயமா உங்கள் நண்பர்களுடன் பகிர்வதுடன் கருத்தையும் பதிவு செய்வது மட்டுமல்லாமல் 12-22-12 மீண்டும் வந்து நிங்கள் எழுதிய கருத்திற்கு ஒரு Like இட்டு நீங்களும் அழியவில்லை என்பதை உறுதிப்படுத்துங்கள்.
மாயன் கணிப்பு இந்த பரபரப்பிற்கு பயன்படுகின்றது. இதில் சிலர் மாயன் கணித்த கலண்டர் இரண்டாயிரத்து பன்னிரெண்டிற்கு பிறகு இல்லை என்பவர்களும், வேறு சில காரணங்களை கூறுபவர்களும், பூமியில் ஏற்பட்ட ஏற்படும் இயற்றை அனர்த்தங்களை காரணம் காட்டுபவர்களும் இந்த வதந்தியுடன் சேர்ந்து செல்கின்றனர். இது போன்றே 2000ம் ஆண்டும் உலகம் அழியப் போவதாக பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தார்கள் என்பதை பரிஸ்தமிழ்.கொம் வாசகர்கள் மறந்திருக்க மாட்டீர்கள் என எண்ணுகின்றோம்.
இவர்களின் உலகம் அழியும் எனும் பரபரப்புச் செய்திகளால் பல சிறுவர்கள் மன அழவில் பெருமளவில் பாதிக்கப்பட்டிருக்கின்றனர் எனவும், இதே போல் இளைஞர்களும் பாதிப்புக்குள்ளாகி உள்ளனர் இதனால் இளைஞர்கள் தவறான செயல்களிலும் சட்ட விரோதச் செயல்களிலும் ஈடு படுவதாக தெரிவிக்கப்படுகின்றது. பரிஸ்தமிழ்.கொம் வாசகர்களே மாயன் கணிப்புப் பற்றி அவுஸ்திரேலியாவில் வாழும் ஜேர்மன் நாட்டைச் சேர்ந்த ஒரு ஆராட்சியாளரின் கருத்தை இங்கு இணைக்கின்றோம்.
எதிர்வரும் 2012 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 21ம் திகதி அன்று உலகம் அழியப் போவதாக மாயனின் அழிவுநாள் தீர்க்க தரி சனம் எடுத்துரைத்தது.
 
மாயன் காலண்டர் குறித்து ஆராய்ச்சி மேற்கொண்ட ஸ்வென் குரேனெமெயல்(Sven Gronemeyer) என்பவர், இந்தத் தீர்க்க தரிசனம் 1300 ஆண்டு களுக்கு முந்தைய கல்வெட்டில் காணப்படுகிறது. ஆனால் இதை அனைவரும் தவறாகப் புரிந்து கொண்டுள்ளனர் என்று விளக்கம் தருகிறார்.
இவர் ஒரு ஜேர்மானியர், அவுஸ்திரேலியாவில் உள்ள லாட்ரோபே பல்கலைக்கழகத்தில் மத்திய அமெரிக்க நாகரிகம் குறித்து ஆராய்ச்சி மேற்கொண்டு வருகிறார்.
இவர் மாயன் காலண்டர் குறித்து கூறுகையில், இந்தக்கல்வெட்டு ஹீரோகிளிஃபிக்ஸ்(hieroglyphs) என்ற எழுத்துக்களால் ஆனது. இதில் மாயனின் கடவுளான போலோன் யோக்தேயின் (Bolon Yokte ) வருகை பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது.
 
படைப்பின் கடவுளான போலோன் யோக்தே போர்க்கடவுளாகவும் இருப்பதால் அவரது வருகையால் உலகம் அழியும், அவரை வரவேற்க அவரது பக்தர்கள் தயாராக வேண்டும் என்பது தான் இந்தக் கல்வெட்டின் வாசகங்கள் தரும் கருத்தாகும் என்றார்.
மேலும் தெரிவிக்கையில், இந்தக் கல்வெட்டில் மாயன் கடவுளின் வருகை தினம் தரப்பட்டுள்ள நிலையில், இதனை 21.12.2012 திகதி என்று உறுதியாக குறிப்பிட இயலாது.
இதை கடவுளைப் பற்றிய தகவலாக அறிந்து கொள்ள வேண்டுமே தவிர, மனிதக்குலத்தின் அழிவு பற்றிய முன்னறிவிப்பாக இக்கல் வெட்டைக் கருதக்கூடாது என்று தெரிவித்துள்ளார்.
 
என்ன பரிஸ்தமிழ்.கொம் வாசகர்களே நாம் 12-21-12 உலகம் அழியாது என்பதை உறுதியாக கூறுகின்றோம். இதை ஒப்புக்கொள்பவர்கள் கருத்துப் பகுதியில் பதிவு செய்யுங்கள் நாங்கள் மீண்டும் 12-22-12 இன் சந்திப்போம் என்ற உறுதியுடன். மறந்து விடாமல் மீண்டும் இந்த பகுதிக்கு வருகை தந்து 12-22-12 Like செய்து உலகம் அழியும் எனும் வதந்தியை நம்பாதவர்கள். நடக்கவில்லை என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள். நன்றி
 

http://www.paristamil.com/tamilnews/view-news-MjM2OTY0NzQ0.htm#.UMjeI2-Nted

No comments:

Post a Comment