Friday, November 30, 2012

காதலனுடன் வாடி வீடு சென்ற மாணவி ! அவன் 3 நண்பர்களும் வந்தனர் !

காதலனுடன் வாடி வீடு சென்ற மாணவி ! அவன் 3 நண்பர்களும் வந்தனர் !

யாழில் கலாச்சார சீர்கோடுகள் வரம்புமீறிச் செல்கிறது என்று தலையால் அடித்துக்கொள்ளும் பெற்றோர்கள் ஒரு புறம் இருக்க, துணைக்குழுக்களும் இராணுவமும் இது நல்லதொரு முன்னேற்றம் என்று சொல்லிவருகிறார்கள் ! கடந்த வாரம் யாழில் நடந்த உண்மைச் சம்பவம் இது ! ஆனால் பெரிய இடத்து மேட்டர் என்பதனால் இது அப்படியே மூடி மறைக்கப்பட்டுவிட்டது ! 16 வயது மாணவி ஒருவரின் காதல் எங்கே கொண்டுபோய் விட்டது ? இவருக்கு நடந்தது என்ன ? வாருங்கள் விடையத்துக்குப் போகலாம் !

யாழில் உள்ள முன்னணி பெண்கள் பாடசாலை ஒன்றில், பயிலும் மாணவி அவர். அவர் பெயர் வித்தியா என்று வைத்துக்கொள்வோம்(மாணவியின் நலன் கருதி பெயர் மாற்றப்பட்டுள்ளது). யாழ்ப்பாணத்தில் உள்ள தமிழர்களில் அநேகமானவர்களுக்கு வெளிநாட்டில் சொந்தக்காரர்கள் இருக்கிறார்கள். அவர்கள் தமது உறவினர்களுக்கு மாதம் தோறும் பணத்தை அனுப்பிவருவது யாவரும் அறிந்ததே. மைனர் கணக்காக பெடியள் வீட்டில் இருந்து வெளிக்கிட்டு மோட்டர் சைக்கிளில் போவார்கள். ஆனால் வீட்டில் உள்ளவர்கள் எங்கே செல்கிறாய்யப்பா என்று கேட்க்க முடியாது. கழுத்தில் ஒரு மைனர் சங்கிலி, கையில் வெளிநாட்டு போன், சுண்டி இழுக்கும் சென்ட்டை அடித்துக்கொண்டு இவர்கள் 16 வயதிலேயே மதுபானக் கடைகளில் தான் நிற்கிறார்கள். கைளில் சிகரெட், வேகமாக ஒட்டி வந்து மோட்டார் சைக்கிளை பார்க் செய்யும் விதம்.... எல்லாம் பெண்களையும், மாணவிகளையும் கவரும் விதத்தில் தான் இருக்கிறது தப்பில்லை.

ஆனால் விவகாரமாகவும் இருக்கிறது ! நாம் குறிப்பிடும் யாழ்ப்பாணத்துப் பெண், 16 வயது நிரம்பியவர். தன்னை விட மிக அதிக வயது வித்தியாசம் கொண்ட ஆண் ஒருவரோடு காதல் வயப்பட்டுள்ளார். இப்படியான காதல் சில எங்கே போய் முடியும் என்று நாம் சொல்லத் தேவையில்லை. குறிப்பிட்ட ஆண், இப் பெண்ணை தனது வீட்டிற்கு வருமாறு அழைத்துள்ளான். ஆசைவார்த்தைகளால் மயங்கிய இப் பெண் அதற்கும் சம்மதித்திருக்கிறார். யாழில் இப்படியான சமாச்சாரங்களுக்கு 1 நாளைக்கு வீடை வாடகைக்கு விடும் கோஷ்டி ஒன்றும் உள்ளதாம். நீங்கள் ஒன்றும் ஹோட்டல் செல்லவேண்டிய தேவை இல்லை. துணை ஆயுதக் குழுக்கள், இவ்வாறு பலரது வீடுகளை எடுத்து பாகம் காகமாகப் பிரித்து வைத்திருக்கிறார்கள். கொழும்பில் இருந்துவரும் சிங்கள சுற்றுலாப் பயணிகள் இதில் தங்குவதும் உண்டு. இப்படியான வீடு ஒன்றிற்கு இப் பெண்ணை அழைத்துச் சென்றுள்ளான் காதலன்.

உள்ளே சென்றபோது முதலில் அவளுக்கு தன் காதலன் மட்டும் தான் தெரிந்திருக்கிறான். ஆனால் பின்னர் அங்கே 3 நண்பர்களும் வந்திருக்கிறார்கள். இது எனது நண்பர்கள் என்று அவன் அறிமுகப்படுத்தி இருக்கிறான். அப்போது கூட அவனை சந்தேகப்படவில்லை இந்தப் பெண். அனைவரும் சேர்ந்து குழிர்பாணம் ஒன்றை அருந்தி பேசிக்கொண்டு இருந்தனர். பின்னர் சில மணி நேரம் கழித்து, நல்ல தூக்கத்தில் இருந்து விழித்து எழுந்துள்ளார் வித்தியா. தனது உடைகள் அகற்றப்பட்ட நிலை, தான் கட்டிலில் கிடந்த கோலத்தைப் பார்த்தே, தனக்கு என்ன நடந்திருக்கும் என்று உணர்ந்துகொண்ட இப் பெண், தனது கைத்தொலைபேசி மூலமாக அம்மாவுக்கு போன் செய்துள்ளார். நடந்த விடையத்தை கூறியுள்ளார். பெற்றோர் உடனடியாக வந்து அவரை அழைத்துச் சென்றுவிட்டனர். இருப்பினும் நெஞ்சு பொறுக்காமல் குறித்த இளைஞர்கள் மீது யாழ் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர் பெற்றோர். மறு நாள் காலை பொலிசார் இந்த நால்வரையும் கைதுசெய்து சிறையில் அடைத்து, பின்னர் மாலை அப்படியே விடுதலை செய்துவிட்டனர்.

பின்னர் தான் மாணவியின் பெற்றோருக்குத் தெரியுமாம், இந்த நால்வரில் ஒருவர் பெரிய இடத்துப் பிள்ளை என்று. பொலிசார் நடவடிக்கை எடுக்க மாட்டார்கள் என்பதும் அவர்களுக்கு நன்கு புரிந்துள்ளது. இதனை அடுத்து பெற்றோர் யாழ் மனித உரிமைக் கழகத்தில் முறைப்பாடு செய்ய, அவர்கள் மீண்டும் பொலிசாருக்கு அழுத்தம் கொடுத்துள்ளார்கள். இதன் காரணமாக தற்போது இந்த இளைஞர்கள் மீண்டும் கைதாகியுள்ளதாக ஊர்ஜிதமற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால் அவர்கள் நீதிக்கும் முன் தண்டனை பெறுவார்களா என்று தெரியவில்லை. யாழில் சமீபத்தில் சிறுமி ஒருவரை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தினார் என்று, இளைஞர் ஒருவரை மக்கள் மடக்கிப் பிடித்து வீதியில் ஊர்வலமாகக் கொண்டுசென்று, பொலிசாரிடம் ஒப்படைத்த சம்பவம் நினைவில் இருக்கலாம். அதே திகதியில்தான் மேற்கண்ட சம்பவமும் இடம்பெற்றுள்ளது. மேற்குறிப்பிட்ட இளைஞரை பொதுமக்கள் வீதியில் இழுத்துச் செல்லும்போது, வயதான முதியவர் சொன்ன ஒரு வார்த்தை மட்டும் நன்றாகக் காதில் கேட்டது ! அது என்ன தெரியுமா ?

இவங்களை எல்லாம் நடு ரோட்டில் வைச்சு சுடவேணும் .... அவங்கள் இருந்திருந்தால் இப்படி எல்லாம் நடந்திருக்குமா ? இல்லை நடக்க தான் விட்டிருப்பாங்களா ? அவங்கட அருமை இப்ப புரியுதா ? என்று நாக்கை பிடுங்கிற மாதிரி கேட்டார் ! அவர் கூறியது ..........விடுதலைப் புலிகளை தான் ! என்பதனை நாம் சொல்லி தெரியவேண்டியது இல்லையே !

அதிர்வுக்காக:-

வல்லிபுரத்தான்.

No comments:

Post a Comment