Saturday, October 6, 2012

யாழ். கொக்குவில் பகுதியில் டெங்கு காய்ச்சலினால் பாடசாலை மாணவன் உயிரிழப்பு: பலர் பாதிப்பு !!!


யாழ். கொக்குவில் இந்துக்கல்லூரி மாணவன் ஒருவர் டெங்கு காய்ச்சலினால் பாதிக்கப்பட்டு இன்று சிகிச்சை பலனின்றி யாழ். போதனா வைத்தியசாலையில் மரணமாகியுள்ளார்.
சம்பியன் லேன் கொக்குவிலைச் சேர்ந்த ஜெயக்குமார் கீர்த்திஜன் வயது 17 என்ற பாடசாலை மாணவனே உயிரிழந்துள்ளார்.
இவர் கடந்த 04ம் திகதி மாலை யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதேவேளை இவ்வீட்டில் இருந்து மேலும் இருவர் டெங்கினால் பாதிக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரியவருவதோடு, மேலும் அப்பகுதியில் பலர் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார பிரிவினரின் தவல்கள் தெரிவிக்கின்றன.

1 comment:

  1. arasil kosukkalal namakku pathippu varugirathu endru parthal, intha siru kosukkalalum namakku pathippu varugirathu engaee pogirathu intha nadu, unmaiyai udanukkudan therinthukolla Puthiya Thalaimurai TV parungal

    ReplyDelete